மற்றொரு புறம், ஈரான்-அமெரிக்கா இடையே பதற்றம் தீவிரமடைந்த நிலையில், கத்தாரில் உள்ள அல் உதெய்த் (Al Udeid) விமானப்படை தளத்தில் இருந்து சில வீரர்கள் மற்றும் அதிகாரிகளை அவசரமாக வெளியேறுமாறு அமெரிக்க ராணுவம் அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.
அமெரிக்கா தாக்குதல் நடத்தியது, கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் துருக்கியில் உள்ள அமெரிக்கத் தளங்கள் தாக்கப்படும் என ஈரான் முன்பே எச்சரித்திருந்தது. கடந்த ஜூன் மாதம் நடந்த தாக்குதல்களுக்குப் பிறகான அனுபவங்களையும் கருத்தில் கொண்டு, தற்போதைய நிலவரத்தை கண்காணிக்க கத்தார் அரசு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது.