இலங்கைக்கு மனிதாபிமான உதவிப் பணிக்காக இந்திய வான்வெளியைப் பயன்படுத்த ஒரு விமானத்திற்கு அனுமதி கோரி டிசம்பர் 1, 2025 அன்று பிற்பகல் 1 மணியளவில் பாகிஸ்தான் ஒரு கோரிக்கையை சமர்ப்பித்ததாகவும், அதே நாளில் அனுமதி வழங்கப்பட்டதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டிட்வா புயல் தாக்கிய இலங்கைக்கு இந்தியா 53 டன் உதவியை அனுப்பியது, விமானங்களை அனுப்பியது.2004 சுனாமிக்குப் பிறகு இலங்கை அதன் மோசமான பேரழிவை எதிர்த்துப் போராடும் நிலையில், இந்திய விமானங்கள், கடற்படைக் கப்பல்கள் மற்றும் மீட்புப்படையினருடன் இந்தியா நிவாரணப் பணிகளை விரிவுபடுத்துகிறது.
இந்நிலையில், இலங்கைக்கு உதவ பாகிஸ்தானின் விமான உதவி அனுமதி வழன்குவதில் இந்தியா தாமதப்படுத்தியதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியது. இதனையடுத்து இந்தியா தவறான தகவல்களைப் பரப்பியதற்காக பாகிஸ்தான் மீது வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கண்டனம் தெரிவித்தார்.
"இந்தியாவுக்கு எதிரான தவறான தகவல்களைப் பரப்புவதற்கான மற்றொரு முயற்சியான பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் அபத்தமான அறிக்கையை நாங்கள் நிராகரிக்கிறோம். இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை எடுத்துச் செல்லும் பாகிஸ்தான் விமானங்களுக்கு வான்வெளி அனுமதி வழங்குவதற்கான கோரிக்கை டிசம்பர் 1, 2025 அன்று மதியம் 1.30 மணிக்கு இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தால் பெறப்பட்டது.