இஸ்ரேலின் அதிகாரபூர்வ தகவலின்படி, அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலில், 1,219 பேர் கொல்லப்பட்டனர், அவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள்.
அப்போதிருந்து, இஸ்ரேல் காசாவில் நடத்திவரும் இராணுவ நடவடிக்கைகளால் குறைந்தது 60,332 பேர் கொல்லப்பட்டுள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் பொதுமக்கள் என்று காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தத் தகவல்கள் நம்பகமானவை என்று ஐக்கிய நாடுகள் சபை கருதுகிறது.
தற்போதைய மோதலுக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே முற்றுகையிடப்பட்டிருக்கும் காசாவிற்கு, மனிதாபிமான உதவிகள் செல்வதை இஸ்ரேல் தொடர்ந்து கட்டுப்படுத்தி வருகிறது.