முன்னதாக, அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலில் அமெரிக்கா மத்தியஸ்தம் செய்யும் முயற்சிகள் குறித்துப் பேசுகையில், இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தைக் குறைக்க அமெரிக்கா விரும்புவதாகக் கூறினார். "இது வெளியுறவுச் செயலாளரும், இப்போது எங்கள் தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான மார்கோ ரூபியோவும் மிகவும் ஈடுபட்டுள்ள ஒரு விஷயம். இந்தப் பதற்றம் விரைவில் குறைய வேண்டும் என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விரும்புகிறார்," என்று அவர் கூறினார். இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் பழையது என்றும், மேலும் மோதல்களைத் தடுக்கப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் லீவிட் கூறினார்.
போருக்கு இந்தியா-பாகிஸ்தான் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்
"ஜனாதிபதி டிரம்ப் ஓவல் அலுவலகத்தில் இருப்பதற்கு முன்பே, பல தசாப்தங்களாக ஒருவருக்கொருவர் முரண்பட்ட இரண்டு நாடுகள் இவை என்பதை அவர் புரிந்துகொள்கிறார். இருப்பினும், இரு நாடுகளின் தலைவர்களுடனும், வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோவுடனும் அவருக்கு நல்ல உறவு உள்ளது. நான் நேற்றுதான் அவரிடம் பேசினேன். இந்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க இரு நாடுகளின் தலைவர்களுடனும் அவர் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார்" என்று அவர் தெரிவித்துள்ளார்.