உள்ளூர் ஊடகங்களின்படி, தாக்குதலுக்குள்ளான பகுதி தனிமைப்படுத்தப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. ட்ரோன் ராணுவ நடவடிக்கையுடன் தொடர்புடையதா அல்லது கண்காணிப்புப் பணியின் ஒரு பகுதியா என்பது குறித்து விசாரிக்கப்படுகிறது. இந்த தாக்குல் சம்பவத்தால் பி.எஸ்.எல் போட்டியில் பங்கேற்கும் இங்கிலாந்து வீரர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்துள்ளதாக டெலிகிராஃப் செய்தி வெளியிட்டுள்ளது. சிலர் தங்க விரும்புவதாகவும், மற்றவர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற விரும்புவதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம்அவசரக் கூட்டத்தை கூட்டி வீரர்களின் பாதுகாப்பை ஆய்வு செய்து வருகிறது.