உலகின் பிரபல தொழிலதிபர் எலான் மாஸ்க் தனது மகனில் ஒருவருக்கு இந்தியாவின் விஞ்ஞான மேதை சுப்ரமணியன் சந்திரசேகரின் பெயரை வைத்துள்ளார் என்று வெளிப்படையாக கூறியபோது, பல இந்தியர்களுக்கே இந்த மகத்தான தமிழரின் பயணம் தெரியாது என்பதே விரக்திகரமான உண்மையாகும்.
ஸ்பேஸ்எக்ஸ் சிஇஓ எலான் மஸ்க், மனைவியான ஷிவோன் ஜிலிஸ் “அரை இந்தியர்” என்றும், அவர்களின் குழந்தைகளில் ஒருவரின் நடுப்பெயர் ‘சேகர்’ நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சுப்ரமணியன் சந்திரசேகரரின் நினைவாக வைக்கப்பட்டதாக கூறினார். ஜிலிஸ் கனடாவில் தத்தெடுப்பு மூலம் வளர்ந்தார் என்றும், மஸ்க் மற்றும் ஜிலிஸுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர் என்றும் தெரிவித்தார். ஜிலிஸ் நியூராலிங்கில் பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுப்ரமணியன் சந்திரசேகரன் லாகூரில் 1910ல் பிறந்தார். அவர் சிறு வயதிலேயே கணிதம் மற்றும் அறிவியலில் ஆர்வம் காட்டினார். அவர் நோபல் பரிசு பெற்ற சி.வி. ராமனின் மருமகனாவார். படிப்பில் சிறந்த அவர், 1930ல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படிக்க இங்கிலாந்து சென்றார். அந்தப் பயணத்தின் போது, கடலில் பயணித்த கப்பல் மேல் அவர் ஒரு பெரிய கண்டுபிடிப்பைச் செய்தார். ஒரு நட்சத்திரம் எவ்வளவு நிறை வரை தாங்கி நிற்கும் என்பதை அவர் கணக்கிட்டார். இது இன்று “சந்திரசேகர் எல்லை” என்று அழைக்கப்படுகிறது.