ஆனால் புவி வெப்பமடைதல் காரணமாக, கிரீன்லாந்தின் காலநிலை வேகமாக மாறி வருகிறது. இங்கு பனி வேகமாக உருகுகிறது. பசுமை தெரிய ஆரம்பித்துவிட்டது. இதன் காரணமாக மக்கள் இந்த நாட்டிற்கு செல்ல ஆரம்பித்துள்ளனர். சுற்றுலாவைப் பொறுத்தவரை, கிரீன்லாந்து மிகவும் விலை உயர்ந்தது. ஏனென்றால், இங்கு ரயில்வே, நெடுஞ்சாலைகள், சாலைகள் இல்லாததால், ஹெலிகாப்டர், விமானம் அல்லது படகு ஆகியவை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்லப் பயன்படுத்தப்படுகின்றன. இங்கு ஹோட்டல் கட்டணங்களும் அதிகம். இதனால் இந்தப் பகுதி பணக்காரர்களுக்கு ஒரு சிறப்பு சுற்றுலாத் தலமாக உள்ளது.