வட சீனாவில் அமைந்துள்ள பெய்யிங் கிராமத்தில் பெரும்பாலான வீடுகள் பூமிக்கடியில் கட்டப்பட்டுள்ளன. மேலிருந்து பார்த்தால், அந்தப் பகுதி முழுவதும் சமவெளியாக இருந்தாலும், பூமிக்கு அடியில் ஆயிரக்கணக்கான வீடுகள் இருக்கின்றன.. பாரம்பரியமாக கட்டப்பட்ட இந்த வீடுகள் பல ஆண்டுகள் பழமையானவை. இன்றும், பல குடும்பங்கள் குழி தோண்டி இந்த வீடுகளை கட்டுகின்றனர்என்றும் கூறப்படுகிறது.
இங்கு கட்டப்பட்டுள்ள அனைத்து வீடுகளும் குகைகள் போல் காட்சியளிக்கிறது. இவற்றை 'குகை குடியிருப்புகள்' என்றும் அழைக்கலாம். பல வீடுகள் 'சுற்றுலா கிராமங்களாக' மாற்றப்பட்டுள்ளன, ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இந்த இடத்தை பார்க்க வருகிறார்கள். சீன அரசாங்கம் 2011 இல் அவற்றை அருவமான கலாச்சார பாரம்பரியமாக பட்டியலிட்டது.