இதுகுறித்து பேசிய ட்ரம்ப் "பிரிக்ஸ் நாடுகள் நமது டாலரை அழிக்க முயன்றன. அவர்கள் ஒரு புதிய நாணயத்தை உருவாக்க விரும்பினர். எனவே நான் வந்தபோது, டாலரின் அழிவைக் குறிப்பிடும் எந்தவொரு பிரிக்ஸ் நாட்டிற்கும் 150% வரி விதிக்கப்படும் என்று நான் முதலில் சொன்னேன், மேலும் உங்கள் பொருட்களை நாங்கள் விரும்பவில்லை என்று சொன்னேன். ஆனால் இப்போது, பிரிக்ஸ் நாடுகள் பிரிந்துவிட்டன," என்று கூறினார்.
பிரிக்ஸ் அமைப்பில் இருந்து இதுவரை தாங்கள் எந்த தகவலும் பெறவில்லை என்று ட்ரம்ப் கூறினார். தொடர்ந்து பேசிய அவர் "அவர்களுக்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. சமீபத்தில் பிரிக்ஸ் நாடுகளிடமிருந்து எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை" என்று கூறினார்.
முன்னதாக இந்த மாத தொடக்கத்தில், பிரிக்ஸ் நாடுகள் "டாலருடன் விளையாடினால்" அமெரிக்காவிடமிருந்து 100 சதவீத வரிகளை எதிர்கொள்ள நேரிடும் என்று டிரம்ப் கூறியிருந்தார். "ஏதேனும் வர்த்தகம் நடந்தால், அது குறைந்தபட்சம் 100% வரியாக இருக்கும். டாலரை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் யோசனை இப்போது "செயலில் இல்லை" என்று அவர் கூறினார்.