ஜப்பான் நாட்டு பிரதமராக இருந்த ஷின்சோ அபே, தெற்கு ஜப்பானின் நாகதோ நகரில் பிறந்தார். தலைநகர் டோக்கியோவுக்கு அருகேயுள்ள செய்கெய் பல்கலைக்கழகத்தில் 1977ம் ஆண்டு சேர்ந்து அரசியல் படிப்பை முடித்தார். பின்னர், மேல் படிப்புக்காக ஐக்கிய அமெரிக்காவிற்கு சென்று தெற்கு கலிஃபோரினியா பல்கலைக்கழகத்தில் இணைந்தார். உயர் கல்வியை முடித்த ஷின்சோ அபே, 1979ம் ஆண்டு உருக்க ஆலை ஒன்றில் பணியாற்றினார். 1982ம் ஆண்டு பணியிலிருந்து விலகிய ஷின்சோ அபே, பின்னர் அரசியல் பணிகளில் ஈடுபட்டார்.