தினமும் எதிர்பாராத திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் தொடரில் இன்று... ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி சம்பவங்கள் பற்றி பார்க்கலாம்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியல் TRP-யில் தொடர்ந்து முதல் இரண்டு இடங்களை பிடித்து கெத்து காட்டி வரும் நிலையில், நேற்றைய இந்த சீரியலின் எபிசோடில் ரேவதி பரமேஸ்வரி பாட்டியை சந்தித்து பேசியதை பார்த்து சாமுண்டீஸ்வரி அவளை கோவிலில் இருந்து அடித்து அழைத்து செல்கிறார். இதை தொடர்ந்து என்ன நடக்க உள்ளது என்பதை பார்ப்போம்.
24
ரேவதி மீது கோபம் கொள்ளும் சாமுண்டீஸ்வரி
சாமுண்டீஸ்வரி, ரேவதி கோவிலில் பாட்டியை பார்த்து பேசியதற்காக மகள் மீது கோபப்படுகிறார். சாமுண்டீஸ்வரியுடன் சேர்ந்து ரோகிணியும் ரேவதியை திட்ட, சுவாதி மட்டும் அக்கா என்னையும் கோவிலுக்கு கூட்டிட்டு போயிருந்தா நானும் பாட்டியை பார்த்து பேசி இருப்பேன் என கூறி, அழுது கொண்டிருக்கும் ரேவதிக்கு ஆறுதல் சொல்கிறார்.
அதனை தொடர்ந்து டாக்டர் மல்லிகாவுக்கு கண்ணில் காயம் ஏற்பட்டு, கடந்த 1 மாதமாக கட்டுடன் இருந்த நிலையில், டாக்டர் ஒருவர் வீட்டிற்கு வந்து மல்லிகாவின் கட்டை அவிழ்க்க மீண்டும் மல்லிகா டாக்கருக்கு பார்வை கிடைக்கிறது. கண் கிடைத்த சந்தோஷயத்தில் சாமி கும்பிட, மல்லிகா டக்கர் கோவிலுக்கு வர அங்கு மகேஷ் - ரேவதி திருமணம் குறித்து அறிந்து மல்லிகா அதிர்ச்சி அடைகிறார்.
44
மாயா மற்றும் மகேஷ் கள்ள உறவு :
உடனே சாமுண்டீஸ்வரிக்கு போன் போட்டு வரச்சொல்லும் மல்லிகா, மாயா, மற்றும் மகேஷ் கள்ள உறவு குறித்து கூறுகிறார். இதை சற்றும் எதிர்பாராத சாமுண்டீஸ்வரி உச்சகட்ட அதிர்ச்சி அடைகிறாள். உடனே துப்பாக்கியை கையில் எடுத்து சாமுண்டேஸ்வரி நேரகா மாயா வீட்டிற்கு வருகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.