விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் பேமஸ் ஆனவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் தொகுத்து வழங்கிய ஸ்டார்ட் மியூசிக், ஊ சொல்றியா... ஊ ஊ சொல்றியா போன்ற நிகழ்ச்சிகளும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றன. இவர் பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி போன்ற ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று இருக்கிறார். இதில் கடைசியாக நடந்து முடிந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் டைட்டில் வின்னர் ஆனார் பிரியங்கா.
24
பிரியங்கா தேஷ்பாண்டே 2வது திருமணம்
பிரியங்கா தேஷ்பாண்டே கடந்த 2016-ம் ஆண்டு பிரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பிரவீனும் விஜய் டிவியில் தான் பணியாற்றி வருகிறார். ஆனால் திருமணமான 6 ஆண்டுகளில் பிரவீனுக்கும், பிரியங்காவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர். இதையடுத்து டிஜே வஷி என்பவருடன் பிரியங்காவுக்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது. முதலில் நட்புடன் பழகி வந்த இருவரும் நாளடைவில் காதலிக்க தொடங்கினர். இதையடுத்து கடந்த மாதம் பிரியங்கா, டிஜே வஷியை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
34
பிரியங்கா பற்றி பரவிய வதந்தி
திருமணம் முடிந்த கையோடு தன்னுடைய கணவரோடு லண்டனுக்கு ஹனிமூன் சென்றிருந்தார் பிரியங்கா. இதனிடையே அவரைப் பற்றி பல்வேறு வதந்திகள் இணையத்தில் உலா வந்த வண்ணம் இருந்தன. அவர் விஜய் டிவியை விட்டு விலகியதாக கூறப்பட்டது. அதுமட்டுமின்றி வஷியை திருமணம் செய்யும் முன்னரே பிரியங்கா கர்ப்பமானதாகவும், அதனால் தான் இருவரும் அவசர அவசரமாக திருமணம் செய்துகொண்டார்கள் என்றெல்லாம் வதந்திகள் சோசியல் மீடியாவிலும் யூடியூப்பிலும் உலா வந்தன.
இந்த வதந்திகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பிரியங்கா தேஷ்பாண்டே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அந்த பதிவில் ‘உங்க வாய் உங்க உருட்டு’ என்கிற கேப்ஷன் அடங்கிய டீ-சர்ட்டை அணிந்தபடி இருக்கும் அவர் குபீரென சிரித்தபடி போஸ் கொடுத்துள்ளார். இதன்மூலம் தன்னைப் பற்றி வரும் வதந்திகள் எல்லாம் பார்த்தால் தனக்கு சிரிப்பு தான் வருகிறது. அவையெல்லாம் உண்மையல்ல உருட்டு என்பதை சூசகமாக சொல்லி உள்ளார் பிரியங்கா.