பின்னர், அண்ணாமலையின் விருப்பத்தை முத்து, மீனாவிடம் பகிர்ந்து கொள்கிறார். அதற்கு மீனா, "நமக்கென வீட்டில் மேல்மாடியில் ஒரு அறை கட்ட வேண்டும் என்று ஏற்கனவே முடிவு செய்தோம். அது முடிந்த பிறகு குழந்தை பற்றிய விஷயத்தை யோசிக்கலாம்" என்று தனது கருத்தை தெரிவிக்கிறார். மற்றொரு புறம், ரவி தனது தந்தையின் ஆசையைப் பற்றி ஸ்ருதியிடம் கூறும்போது, அதற்கு ஸ்ருதி நகைச்சுவையாக, "ஒரு பேபி டாலை வாங்கி அப்பா கையில் கொடுத்து விடுங்கள். அவர் அதை கொஞ்சிக்கொண்டு சந்தோஷமாக இருப்பார்" என்று கிண்டலாக பதிலளிக்கிறார்.
இவ்வாறு குடும்பத்தில் குழந்தை பற்றிய பேச்சுகள் ஒரு புறம் நகர, மறுபுறம் மனோஜின் ரகசிய திருமணம் எப்போது வெளிச்சத்திற்கு வரும் என்ற பரபரப்பும் அதிகரிக்கிறது. அடுத்தடுத்த எபிசோட்களில் என்னென்ன திருப்பங்கள் காத்திருக்கின்றன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.