Siragadikka Aasai Serial 16 July 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா திடீரென மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில், மனோஜ் வீட்டில் யாருக்கும் தெரியாமல் கனகா என்கிற மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்திருக்கிறார். பணத்துக்கு ஆசைப்பட்டு தான் மனோஜ் இந்த திருமணத்தை செய்துகொண்டார். ஆனால் பணம் சொன்னபடி வராததால் கடும் அப்செட்டில் இருக்கிறார். மறுபுறம் ரோகிணி, தான் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல முடிவெடுத்து இருக்கிறார். மனோஜ் 5 லட்சம் பணத்தை கொடுத்ததும் துபாய் செல்ல இருக்கிறார் ரோகிணி. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
25
மீனாவுக்கு என்ன ஆச்சு?
இன்றைய எபிசோடில், ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸுக்கு மீனா மட்டும் செல்கிறார். முத்து சவாரி இருப்பதாக கூறி கிளாஸுக்கு வராமல் கிளம்பி விடுகிறார். இதே நேரத்தில் மிஸ்ராவும் கிளாஸில் கலந்து கொள்கிறார். வழக்கம்போல் கிளாஸ் நடைபெற்று கொண்டிருக்க, மாணவர்களின் செயல்பாட்டுக்கு ஸ்வேதா மதிப்பெண்களையும் வழங்குகிறார். ஆனால், கிளாஸ் முடிந்து வெளியேறும்போது மீனாவுக்கு திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்படுகிறது. இதனால் அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்கள்.
35
குண்டை தூக்கிப்போட்ட டாக்டர்
மருத்துவர் பரிசோதனை செய்த பிறகு, ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று கூறுகிறார். இந்த தகவல் முத்துவுக்கு தெரியவர, பதறியபடி மருத்துவமனைக்கு ஓடி வருகிறார். ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்த மருத்துவர், மீனாவுக்கு குழந்தை பெறுவதில் ஒரு பெரிய இருப்பதாகவும், அதற்கு சிக்கலான சிகிச்சை தேவைப்படலாம் என்றும் கூறுகிறார். மேலும், இந்த சிகிச்சையை மூத்த மருத்துவரே மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறார். இதைக்கேட்டதும் முத்து, மீனா இருவருக்கும் பேரதிர்ச்சி ஆகிறது. இந்த செய்தியால் மனமுடைந்து அழும் மீனாவை முத்து ஆறுதல் கூறி மருத்துவமனையிலிருந்து அழைத்துச் செல்கிறார்.
அதே நேரத்தில், அந்த வழியாக ஆட்டோவில் சென்ற விஜயா, முத்துவும் மீனாவும் மகப்பேறு மருத்துவமனையில் இருந்து வெளியே வருவதை பார்த்து சந்தேகப்படுகிறார். "மீனா கர்ப்பமாக இருக்கிறாளோ?" என்ற எண்ணத்தில் மருத்துவமனைக்குள் சென்று விசாரிக்கிறார். ஆனால், மீனாவின் தங்கை சீதா, வயிற்று வலி காரணமாகவே அக்கா மருத்துவமனைக்கு வந்ததாக கூறியதும் விஜயா சற்று நிம்மதி அடைகிறார். இதையடுத்து விஜயாவும் அங்கிருந்து கிளம்பி செல்கிறார். மறுபக்கம், மனோஜ் இன்னும் பணம் வராததால் நியூமராலஜிஸ்டிடம் வருத்தப்படுகிறார்.
55
மனோஜுக்கு வந்த குட் நியூஸ்
அதற்கு, "இப்போது நேரம் சாதகமாக இல்லை. ஆனால் விரைவில் உனக்கு நல்ல பண வரவு வரும்" என்று அவர் நம்பிக்கை கொடுக்கிறார். அந்த நேரத்தில் கனகாவின் அம்மா வந்து, "நாளை வந்து பணத்தை வாங்கிக்கொள்ளுங்கள். பணம் கொடுத்த பிறகுதான் வேலை நடக்கும்," என்று கூறிச் செல்கிறார். இதைக் கேட்ட மனோஜ் மகிழ்ச்சியில் திளைக்கிறார். இப்போது மீனாவின் மருத்துவப் பிரச்சினை எப்படி தீரும்? முத்து இந்த சோதனையை எப்படி சமாளிப்பார்? மனோஜ் எதிர்பார்த்த பணம் கிடைக்குமா? என பல கேள்விகளுக்கு பதில் இனிவரும் எபிசோடில் கிடைக்கும்.