இதனால் மன வேதனை அடைந்த சுகன்யா ஏங்க என்னுடைய வீட்டிற்கு எப்போது போக, வீட்டிற்கு தல தீபாவளிக்கு வரச்சொன்னார்கள். நீங்கள் உங்களுடைய மாமாக்கிட்ட சொல்ல வேண்டியது தானே என்று அப்படி இப்படி என்று கேட்டார். இதோ இப்போ போய்விட்டு வந்துவிடுகிறேன் என்று புறப்பட்டுச் சென்றார்.
அடுத்த காட்சியாக சரவணன் மற்றும் தங்கமயில் தொடர்பான காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில், சரவணன், தங்கமயிலிடம் ஆதார் கார்டை கேட்க, அவரோ மலுப்ப ஆரம்பித்தார். என்னுடைய ஆதார் கார்டா, உங்களுடைய ஆதார் கார்டா, எதுக்கு மாமா என்று கேட்க, எனக்கு சந்தேகம் இருக்கிறது. நீ கிச்சனில் இருக்கும் போது 2010ல் 10ஆவது படித்துக் கொண்டிருந்தேன் என்று சொன்ன போது எனக்கு சந்தேகம் வந்தது அதான் கேட்டேன் என்றார்.