விஜய் டிவியின் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் தற்போது அரங்கேறி உள்ள எதிர்பாராத திருப்பங்கள் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன. மனோஜ் - ரோகிணி விவாகரத்து நடக்கப் போகும் தருணத்தில் நடந்த சம்பவம் கதையின் போக்கையே மாற்றியுள்ளது. குடும்பத்தினர் அனைவரும் முன்னிலையில், மனோஜின் வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் என்பதற்காக விவாகரத்துக்கு சம்மதிப்பதாக ரோகிணி தெரிவிக்கிறார். ஆனால் அவரது இந்த முடிவை நம்பாத விஜயா, இது எல்லாம் நாடகம் என்று கடுமையாக விமர்சித்து, உடனே கையெழுத்திட்டு வீட்டை விட்டு வெளியேறுமாறு அழுத்தம் கொடுக்கிறார்.
அனைவரும் ரோகிணியை அமைதிப்படுத்தி விவாகரத்து ஆவணத்தில் கையெழுத்திடச் சொல்கிறார்கள். ரோகிணியும் பேனாவை எடுத்துக் கொண்டு கையெழுத்திட முயற்சிக்கிறார். ஆனால் கடைசி நொடியில் மனம் தளர்ந்து, கண்ணீர் மல்க அப்படியே நிற்கிறார். இதையும் விஜயா நடிப்பாகவே எடுத்துக்கொண்டு தொடர்ந்து அவமதிக்கிறார். இதையடுத்து வித்யா மீண்டும் ரோகிணியை சமாதானப்படுத்தி கையெழுத்திட வலியுறுத்துகிறார். இறுதியாக கையெழுத்திட பேனாவை எடுத்த அந்த நொடியில், ரோகிணி திடீரென மயங்கி கீழே விழுந்துவிடுகிறார்.
35
ரோகிணியை பரிசோதித்த டாக்டர்
இருந்தபோதிலும், இதுவும் நாடகம் தான் என்று விஜயா குற்றம்சாட்ட, மற்றவர்கள் உடனடியாக ரோகிணியை கவனித்து மருத்துவரை அழைக்கிறார்கள். சிறிது நேரத்தில் வந்த மருத்துவர் ரோகிணியை பரிசோதித்த பிறகு, இவங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா என கேட்கிறார். அதற்கு ஆம் என்று அருகில் இருந்த மீனா சொல்ல, விஜயா, இவளுக்கு இப்போ டைவர்ஸ் ஆகப்போகுது என கூறுகிறார். விவாகரத்து இன்னும் சட்டப்படி கிடைக்காததால், மனோஜ்தான் அவரது கணவர் என்று கூறியதும் கப்சிப் என ஆகிறார் விஜயா.
அதன்பிறகு மருத்துவர் கூறும் தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. ரோகிணி கர்ப்பமாக இருப்பதாக அவர் சொல்கிறார். இந்த ஒரு தகவல் குடும்பத்தினர் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைக்கிறது. குறிப்பாக மனோஜ் மற்றும் விஜயாவின் முகத்தில் அதிர்ச்சி தெளிவாக தெரிகிறது. மருத்துவர் சென்ற பிறகு கண் திறக்கும் ரோகிணிக்கும் தனது கர்ப்பம் குறித்து தெரிய வருகிறது. இருந்தாலும், விஜயா மீண்டும் விவாகரத்து ஆவணத்தில் கையெழுத்திட வற்புறுத்துகிறார். ஆனால் இம்முறை ரோகிணி உறுதியான முடிவை எடுக்கிறார்.
55
விவாகரத்துக்கு நோ சொன்ன ரோகிணி
"இனி என்னால் விவாகரத்து கையெழுத்து போட முடியாது. இந்த சூழ்நிலையில் மனோஜை விட்டு பிரிய மாட்டேன். அவருடன்தான் வாழப் போகிறேன்," என்று தனது இறுதி முடிவை ரோகிணி தெரிவிக்கிறார். இதனால் மனோஜ் வாழ்க்கை மிகப்பெரிய குழப்பத்தில் சிக்கியுள்ளது. ரோகிணியின் இந்த முடிவை குடும்பத்தினர் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? விஜயா அடுத்து என்ன செய்யப் போகிறார்? இந்த புதிய திருப்பம் மனோஜ் - ரோகிணி உறவை மீண்டும் இணைக்குமா? என்ற கேள்விகளுக்கு இனி வரும் எபிசோட்களில் பதில் கிடைக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.