பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இல், சென்னையில் கதிரின் திடீர் முடிவு ராஜியை காயப்படுத்த, மறுபுறம் பாண்டியனின் கோபம் கோமதியை தாக்குகிறது. மீனாவின் ஈகோ செந்திலுடனான உறவில் புதிய சிக்கலை உருவாக்குகிறது. இது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் பெரும் புயலை சந்திக்கிறது.
வீட்டுச் சுவர்களுக்குள் முடங்கிக் கிடந்த ராஜி மற்றும் கதிர், சென்னைக்கு வந்த பிறகு ஒரு புதிய உலகைக் காண்கிறார்கள். மெரினா கடற்கரையின் அமைதியும், நகரத்தின் வேகமும் அவர்களுக்குள் ஒரு நெருக்கமான உணர்வை உருவாக்குகிறது. சுதந்திரமாகச் சுற்றித் திரியும் அந்தத் தருணங்களில் காதல் தீவிரம் அடைந்தாலும், கதிரின் மனதில் ஒரு 'பதட்டம்' ஒட்டிக்கொள்கிறது. "ஒரே அறையில் இருந்தால் பயிற்சியில் கவனம் சிதறும்" என்பது போல் கதிர் யோசிப்பதாக கதை செல்லுமாம். கதிரின் திடீர் முடிவு, ராஜியின் மனதை ரணமாக்குகிறது. காதலில் விழுந்த பெண்ணுக்கு, இந்தத் தற்காலிக விலகல் ஒரு பெரிய தவிர்ப்பாகத் தெரிவதால், அங்கே ஒரு மெல்லிய விரிசல் எட்டிப் பார்க்கிறது.
24
பாண்டியனின் கோபம்... தகிக்கும் இல்லம்!
மறுபுறம், பாண்டியனின் இல்லம் இப்போது ஒரு போர்க்களமாக மாறியிருக்கிறது. மறைக்கப்பட்ட திருமண ரகசியம் பாண்டியனை ஒரு பிடிவாதக்காரராக மாற்றியுள்ளது. கடைக்கு வர முயன்ற கோமதியை, "நீ வந்தால் நான் வீட்டுக்கே வரமாட்டேன்" என அவர் தடுத்த நிறுத்தும் வகையில் கதைகளம் வரும் வாரத்தில் செல்லவுள்ளதாக தெரிகிறது. இது குடும்பத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாசம் ஒருபுறம் இருந்தாலும், தன் கொள்கைக்காக அவர் வெளியே படுக்கும் அளவுக்குச் சென்றது, உறவுகளுக்கு இடையே ஒரு ஆழமான இடைவெளியை உருவாக்கும். இந்தச் சூழல் பாண்டியன்-கோமதி இடையிலான புரிதலை மீண்டும் கேள்விக்குறியாக்கும்.
34
செந்திலின் தவிப்பு... மீனாவின் அதிரடி ஈகோ!
இந்தக் குடும்பப் புயலில் சிக்கித் தவிக்கும் செந்தில், கோமதியின் வாக்குமூலத்தால் சற்றே நிம்மதி அடைகிறார். "தப்பு என் மீதுதான், மீனாவுக்கோ ராஜிக்கோ இதில் சம்பந்தமில்லை" என கோமதி உண்மையை உடைத்த பிறகு, செந்திலின் மனம் இளகுகிறது. ஆனால், அங்கேதான் மீனா தனது 'ஈகோ' ஆட்டத்தைத் தொடங்குகிறாள். பாண்டியன் எப்படி கோமதியைக் கையாளுகிறாரோ, அதே பாணியில் மீனா செந்திலிடம் காட்டும் அலட்சியம் கதையில் ஒரு சுவாரசியமான முரணைக் காட்டுகிறது. ஆண்களின் அதிகாரத்திற்குப் பெண்களின் எதிர்வினை எப்படி இருக்கும் என்பதை மீனாவின் கதாபாத்திரம் பிரதிபலிக்கிறது.
தற்போது 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' ஒரு சினிமா கிளைமாக்ஸ் போன்ற பரபரப்பான கட்டத்தில் நிற்கிறது. ராஜியின் மனக்கசப்பு நீங்குமா? பாண்டியனின் கோபம் தணியுமா? அல்லது மீனாவின் பிடிவாதத்தால் புதிய சிக்கல்கள் உருவெடுக்குமா? என்கிற கேள்விகள் ரசிகர்களிடையே ஒரு 'திகில்' கலந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன. உறவுகளின் சிக்கல்களையும், உணர்வுகளின் போராட்டத்தையும் அழகாகப் படம்பிடித்துக் காட்டும் இந்தத் தொடர், வரும் நாட்களில் இன்னும் பல அதிரடித் திருப்பங்களுக்குத் தயாராகி வருகிறது.