பாண்டியனின் மௌனத்தை உடைக்க கோமதி ஒரு சிறு தந்திரத்தைக் கையாள்கிறார். தனக்குக் கடுமையான குளிர் காய்ச்சல் இருப்பது போல நடித்துக் கொண்டு நடுங்குகிறார். சரவணன் அவருக்குத் தைலம் தேய்த்து விட்டு அக்கறையுடன் கவனித்துக் கொள்கிறார். பாண்டியன் தன்மீது அக்கறை கொண்டு பேசுவார் என கோமதி எதிர்பார்த்தார்.
ஆனால், அங்கு வந்த பாண்டியனோ கோமதியின் நிலையைப் பார்த்தும் பார்க்காதது போல எதார்த்தமாக இருக்கிறார். "உடம்பு சரியில்லை என்றால் ஆட்டோ பிடித்து மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியதுதானே" எனக்கூறிவிட்டு, சரவணனை அழைத்துக் கொண்டு கடைக்குப் புறப்படுகிறார்.
அரசியிடம் சிக்கிய உண்மை
பாண்டியன் கிளம்பிய பிறகு, அவரது மகள் அரசி அங்கு வருகிறார். கோமதியின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்த அரசி, "அப்பா பேச வேண்டும் என்பதற்காகத்தானே நீ இப்படி நடித்தாய்?" எனக் கேட்க, கோமதி தனது நடிப்பை ஒப்புக்கொள்கிறார். எப்படியாவது பாண்டியனைப் பேச வைப்பேன் என அரசியிடம் சவால் விடுகிறார் கோமதி. மேலும், பாண்டியன் அரசியிடம் செலவுக்குப் பணம் கொடுத்துவிட்டுச் செல்வது, அவர் கோபமாக இருந்தாலும் குடும்பப் பொறுப்பைத் தவறவில்லை என்பதைக் காட்டுகிறது.