தன்னுடைய கடைக்கு எதிராக கடை திறந்த பழனிவேல் – ஷாக்கான பாண்டியன் – இனி என்ன நடக்கும்?

Published : Nov 16, 2025, 11:34 AM IST

Palanivel Open Gandhimathi Stores : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இந்த வாரம் என்ன நடக்கும் என்பது தொடர்பான புரோமோ வீடியோவை விஜய்டிவி வெளியிட்டுள்ளது. அதில் என்ன நடக்கிறது என்பது பற்றி பார்க்கலாம்.

PREV
19
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரோமோ வீடியோ

விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இந்த வாரம் என்ன நடக்கும் என்பது தொடர்பான புரோமோவை விஜய் டிவி வெளியிட்டது. ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் ஏற்கனவே கூறியது போன்று பழனிவேலுவின் அண்ணன்களான முத்துவேல் மற்றும் சக்திவேல் இருவரும் இணைந்து பாண்டியனுக்கு எதிராக பழனிவேலுவிற்காக கடை திறக்க திட்டமிட்டனர்.

29
நவம்பர் 17 முதல் 22 வரை பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரோமோ

ஆனால், என்ன கடை, எங்கு திறக்கிறோம் என்பது பற்றி பழனிவேலுவிற்கு எதுவும் தெரியாத சூழலில் தன்னுடைய கடைக்கு எதிராகவே பழனிவேல் கடை திறந்தது பார்த்து பாண்டியன் அதிர்ச்சி அடைந்தார். அதைப் பற்றி முழுவதுமாக பார்க்கலாம். பழனிவேலுவிற்கு சொந்தமாக கடை வைக்க அவரது அண்ணன்களான முத்துவேல் மற்றும் சக்திவேல் இருவரும் திட்டமிட்டனர். இதற்காக இடத்தையும் பார்த்து வைத்துவிட்டனர். சொந்தமாக கடை வைப்பது பற்றி பழனிவேல் அவரது அக்கா மற்றும் மச்சானிடம் சொல்லாத நிலையில் தனது மகனுக்காக காந்திமதி மகளிடமும், மருமகனிடமும் பேசியுள்ளார்.

39
காந்திமதி ஸ்டோர்ஸ்

தனது அண்ணன்கள் தனக்கு சொந்தமாக கடை வைத்துக் கொடுக்கிறார்கள் என்று தனது அக்காவிடம், மச்சானிடம் சொல்ல முடியாமல் தவித்த காட்சிகள் ரசிகர்களுக்கு புரியும். ஆனால், அதைப் பற்றியெல்லாம் கோமதி புரிந்து கொள்ளவில்லை. பழனிவேலு இத்தனை நாட்களாக தனது அக்காவும், மச்சானும் தன்னை அவர்களது மகன்களாக பார்த்து வளர்த்த நிலையில் இனிமேல் தனியாக செல்ல போகிறேன் என்று எப்படி சொல்ல மனசு வரும் என்று அவர் சொல்லாமல் இருந்துவிட்டார்.

49
குத்து விளக்கு ஏற்றி வைத்த காந்திமதி

ஆனால், பெத்த பாசம் காந்திமதி, தனது மகளிடமும், மருமகனிடமும் சொல்லிவிட்டார். செந்தில் அரசு வேலைக்கு சென்றுவிட்டான், கதிரும் டிராவல்ஸ் வைத்துவிட்டான், சரவணனும் கடையில் வேலை பார்க்கிறான். ஆனால், பழனிவேல் அப்படியே இருந்துவிட முடியாது அல்லவா. அவனை நம்பியும் ஒரு பெண் வந்துவிட்டாள். அப்படியிருக்கும் போது இன்னும் எத்தனை நாட்கள் தான் உங்களை நம்பி கடையில் வேலை பார்ப்பான் என்று வருத்தமாக சொல்லி கடைசியில் அவனுக்கு அவனது அண்ணன்கள் சொந்தமாக கடை வைத்துக் கொடுக்க ஏற்பாடுகள் செய்துவிட்டார்கள்.

59
சந்தோஷத்தில் சுகன்யா

அதற்கு மட்டும் நீங்கள் சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இது குறித்து பழனிவேலுவிடம் கோமதி கேட்க, இதைப் பற்றி என்னிடமே நீ சொல்லியிருக்கலாம். ஏன், அம்மாவை வைத்து சொல்ல வைத்தாய் என்று பழனிவேலுவிடம் கோமதி கோபித்துக் கொண்டார். கடைசியில் நீ கடை வைப்பது எங்களுக்கு சம்மதம் தான். அதைப் பற்றி நீ ஒன்றும் கவலைப்படாதே, என்று ஆறுதல் கூறினார். இதைத் தொடர்ந்து பாண்டியனும், நீ வேலையை நன்றாக கற்றுக் கொண்ட பிறகு உனக்கு நாங்களே ஏதாவது செய்து கொடுக்கணும் என்று நினைத்தோம். ஆனால், அதற்குள்ளாக உங்களது அண்ணன்களே கடை வைத்துக் கொடுக்கிறார்கள்.

69
பழனிவேல் மற்றும் பாண்டியன்

நீ நல்லபடியாக முன்னுக்கு வந்தால் அதுவே போதும் என்று கூறினார். பழனிவேலுவைத் தொடர்ந்து சுகன்யாவும் ரொம்பவே சந்தோஷமாக இருந்தார். ஏனென்றால் பாண்டியனும், கோமதியும் தனது கணவர் சொந்தமாக கடை வைப்பதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டார்கள் என்று சந்தோஷப்பட்டார். ஆனால், என்ன கடை என்று இதுவரையில் யாரும் பேசவில்லை. அதில் சீரியல் இயக்குநர் கொஞ்சம் டுவிஸ்ட் வைத்திருக்கிறார். 

79
பாண்டியன் ஸ்டோர்ஸ் - காந்திமதி ஸ்டோர்ஸ்

பழனிவேலுவின் அண்ணன்கள் பற்றி எல்லோருக்குமே தெரியும். எப்படியாவது பழனிவேலுவை தங்களது பக்கம் இழுக்க வேண்டும் என்றும் பாண்டியனை பழி வாங்க வேண்டும் என்றும் ஆசைப்பட்டுள்ளனர். அதற்கு முதல்படியாக இப்போது பழனிவேலுவிற்கு சொந்தமாக கடை வைக்க ஏற்பாடுகள் நடந்துள்ளது. இது எப்படியும் பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்று பெரிய கடையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

89
மருமகன் கடைக்கு எதிராக மகன் கடை

இப்போது அதன்படியே விஜய் டிவி வெளியிட்ட புரோமோவிலும் நடந்துள்ளது. ஆம், பாண்டியனை பழி வாங்க, பழனிவேலுவை தங்களது பக்கம் இழுப்பதற்கு முத்துவேல் மற்றும் சக்திவேல் போட்ட திட்டம் நடக்கிறது. பாண்டியன் கடைக்கு எதிராகவே பழனிவேல் தனது அம்மா காந்திமதி ஸ்டோர்ஸ் என்ற பெயரில் கடை திறந்துள்ளார்.

இதை பார்த்த பாண்டியன் அதிர்ச்சி அடைந்தார். உடனே வீட்டிற்கு வந்து கோமதியிடம் இதைப் பற்றி கூற்றி ஆத்திரமடைந்தார். அப்போது அங்கு பழனிவேல் வரவே, இந்த குடும்பத்துக்கு துரோகம் செய்ய எப்படி மனசு வந்துச்சு, இனிமேல் உனக்கும் இந்த குடும்பத்துக்கும் இருந்த உறவு முடிந்துவிட்டது. இனிமேல் இங்கு வரக் கூடாது என்று பாண்டியன் ஆதங்கமாக பேசினார். அதோடு அந்த புரோமோ முடிந்தது.

99
அப்செட்டில் காந்திமதி

தனது மகன் பழனிவேலுவிற்கு மருமகன் கடைக்கு எதிராக இப்படியொரு பிரம்மாண்டமான கடையை தொடங்கியது காந்திமதிக்கும் விருப்பம் இல்லை என்று தெரிகிறது. ஆனால், சுகன்யாவிற்கு இது எல்லையில்லா மகிழ்ச்சி தான். ஏனென்றால் பாண்டியன் குடும்பத்தில் தனது கணவருக்கு நேர்ந்த அவமானம், அவரை எப்படியெல்லாம் பயன்படுத்தினார்கள் என்று புரிந்து கொண்ட சுகன்யாவிற்கு இப்போது அந்த குடும்பத்தை பழி வாங்கியது போன்று கணவருக்கு இப்படியொரு பிரம்மாண்டமான கடை திறக்கப்பட்டுள்ளது அல்லவா. அதனால், சந்தோஷமாகத்தான் இருப்பார். இனிமேல் தான் ஆட்டம் சூடு பிடிக்கும். இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது இது மம்மூட்டி, முரளி நடித்த ஆனந்தம் படத்தின் காட்சிகள் போன்று தெரிகிறது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories