கார்த்திக் போட்ட மாஸ்டர் பிளான்... தப்பிப்பாரா தீபா? கார்த்திகை தீபம் சீரியலின் விறுவிறு அப்டேட்

Published : Nov 20, 2023, 11:53 AM IST

ஜீ தமிழில் கார்த்திக், அர்த்திகா நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

PREV
14
கார்த்திக் போட்ட மாஸ்டர் பிளான்... தப்பிப்பாரா தீபா? கார்த்திகை தீபம் சீரியலின் விறுவிறு அப்டேட்
Karthigai deepam

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் தீபா திரும்பி வீட்டுக்கு வந்ததை தொடர்ந்து இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, ஆபிசில் ஸ்னேகா, தீபாவை இது நம்ம ஆபிஸ், நம்ம தான் சுத்தமா வச்சுக்கணும் என்று சொல்லி கிளீன் செய்ய சொல்கிறாள்.

24
Karthigai deepam serial

தீபாவும் ஆபிஸை கிளீன் செய்து கொண்டே, இது நான் பாட வேண்டிய இடம் என நினைத்து தான் பாட்டு பாட, அதை கார்த்திக் பார்த்து பாராட்டுவது போல நினைத்து கொள்கிறாள். அடுத்து ஆபிஸ் வரும் கார்த்திக் வேலை செய்பவர்கள் விவரங்கள் அனைத்தையும் வாங்கி தீபா தனது பக்கத்திலேயே இருந்து வேலை செய்வது போல செய்கிறான். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

34
zee tamil Karthigai deepam serial

அதோடு இளையராஜாவிடம் பல்லவி என்ற பெண்ணுக்கு அவளுக்கான அங்கீகாரத்தை வாங்கி தர வேண்டும் என்பதற்காக தானே நாம் இந்த கம்பெனியை வாங்கினோம் என்று சொல்கிறான். மேலும் லைன் கிளப் விழாவில் ரூப ஸ்ரீ பாட ஏற்பாடு செய்து அவரிடம் கான்டராக்ட் போடுங்க என்று சொல்ல அதை கேட்டு தீபா அதிர்ச்சி அடைகிறாள்.

44
Karthigai deepam serial Today episode

என்னை பிடிக்க என்னைய வச்சியே பிளான் போடுறாங்க என தவிக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்தாக  நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்... நடிகராக கலக்கும் கிரிக்கெட்டர்... மும்பை இந்தியன்ஸில் கலக்கியவருக்கு கோலிவுட்டில் குவியும் பட வாய்ப்பு

Read more Photos on
click me!

Recommended Stories