தங்கமயிலுக்கு ஒரு முதியவரைப் பார்த்துக்கொள்ளும் வேலையைச் சிபாரிசு செய்ய மீனா கோவிலுக்குச் சென்றிருந்தார். அங்குதான் அந்தப் பேரதிர்ச்சி அவருக்குக் காத்திருந்தது. ஒருபுறம் மயில் வாழ்வா சாவா எனப் போராடிக்கொண்டிருக்க, மறுபுறம் சரவணன் அஞ்சலி என்ற பெண்ணுடன் கோவிலில் ரகசியமாகப் பேசிக்கொண்டிருப்பதை மீனா நேரில் பார்த்தார்.
கையும் களவுமாகப் பிடித்த மீனா!
சரவணன் இவ்வளவு சீக்கிரம் வேறொரு பெண்ணுடன் நெருக்கம் காட்டுவார் என்று மீனா கனவிலும் நினைக்கவில்லை. அஞ்சலியுடன் சரவணன் பேசிக்கொண்டிருந்த விதம், அவர்களின் நெருக்கம் அனைத்தையும் பார்த்த மீனா அங்கேயே உறைந்து போய் நின்றார். எப்போதும் நேர்மையாக நடக்கும் சரவணன், விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும்போதே அஞ்சலியுடன் கோவிலில் என்ன செய்கிறார்? இது தற்செயலான சந்திப்பா அல்லது திட்டமிட்ட ரகசிய உறவா? என்று மீனாவும் சீரியல் ரசிகர்களும் யோசிக்கும் விதத்தில் உள்ளது.