ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வரும் மணிமேகலை, தன்னுடைய காதல் கணவர் ஹுசைன் உடன் சேர்ந்து ஜோடியாக ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி உள்ளார்.
தொகுப்பாளினி மணிமேகலை, தனது துறுதுறு பேச்சாலும் இயல்பான நடத்தையாலும் ரசிகர்கள் மனதில் தனியிடம் பிடித்தவர். 2017ஆம் ஆண்டு, பிரபல நடன இயக்குநர் ஹுசைனுடன் இவரது காதல் திருமணம் நடந்தது பலருக்கும் தெரியும்.
27
மணிமேகலை காதல் கதை
இந்து - முஸ்லிம் என இருவரும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களின் காதலுக்கு நிறைய எதிர்ப்புகள் வந்தாலும் அதை தைரியமாக எதிர்கொண்டு இன்றளவும் குறையாத காதலுடன் பயணித்து வருகிறார்கள். ரம்ஜான், பக்ரீத், மொகரம், மிலாது நபி என ஒவ்வொரு இஸ்லாமிய பண்டிகையிலும் மணிமேகலை கணவருடன் இணைந்து முழு மனதோடு பங்கேற்கிறார்.
37
மதங்களை கடந்த காதல்
அதே நேரம், ஹுசைனும் மனைவியின் இந்து மத நம்பிக்கைகளை அன்போடு ஏற்று, மாலை அணிந்து திருநீர் பூசி கோயில்களில் வழிபடுகிறார். கூடுதல் சிறப்பு என்னவென்றால், சமீபத்தில் ஹுசைன் சபரிமலை ஐயப்பனுக்கு மாலையிட்டு "சுவாமியே சரணம் ஐயப்பா" என தன் சமூக வலைதளத்தில் நெகிழ்ச்சியாக பதிவிட்டது மிகவும் வைரல் ஆனது.
கடந்த ஆண்டு பக்ரீத் பண்டிகையன்று மணிமேகலை பதிவிட்ட "காதலை விட பெரிய மதம் எதுவும் இல்லை" என்ற வரிகள் இணையத்தில் வேகமாக பரவி பாராட்டுகளை பெற்றன.
57
ரம்ஜான் கொண்டாட்டம்
இந்த நிலையில் இன்று ரம்ஜான் பண்டிகையை ஒட்டி, தன் கணவர் ஹுசைன் உடன் சேர்ந்து ஜோடியாக புது டிரெஸ் அணிந்து எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
67
பிரியாணி இல்லை
அந்த பதிவில் அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ள மணிமேகலை, இறுதியாக எனக்கே கடை பிரியாணி தான், என்கிட்ட பிரியாணி கேட்காதீங்க என குறிப்பிட்டு இருக்கிறார்.
77
பாராட்டப்படும் ஜோடி
இந்த ஜோடியின் அன்பான பயணம், மதச்சார்பின்மையின் நிஜமான முகத்தை காட்டுவதாக ரசிகர்கள் கூறுகின்றனர். உண்மையான காதலுக்கு மத எல்லைகளே கிடையாது என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த ஜோடி!