விஜய் தொலைக்காட்சி வழங்கிய பிரபல இசை நிகழ்ச்சி ‘சூப்பர் சிங்கர் – சீசன் 11’ இன் கிராண்ட் பினாலே, 01.02.2026 அன்று மதியம் 3.30 மணி முதல் இரவு 9 மணி வரை நேரலையாக நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட திறமையான பாடகர்கள் பங்கேற்ற இந்த சீசனில், இறுதிப்போட்டிக்கு 7 போட்டியாளர்கள் தகுதி பெற்றனர்.
இறுதி மேடையில் சரண், ஆப்ரஹாம், நிக்கில், தர்ஷனா, மீனாட்சி, திஷாதனா, தவசீலினி ஆகியோர் தலா இரண்டு பாடல்களை பாடி தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சியை வழக்கம்போல் மாகாபா ஆனந்த் – பிரியங்கா இணை தொகுத்து வழங்கினர். ஆரம்பம் முதல் தொடர்ந்து நடுவர்களாக இருந்து வந்த மிஷ்கின், கங்கை அமரன், உன்னிகிருஷ்ணன், சித்ரா, அனுராதா ஸ்ரீராம் உள்ளிட்டோர் கிராண்ட் பினாலேவிலும் கலந்து கொண்டனர்.