பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், வீட்டை விட்டு வெளியேறும் கோமதி, பாண்டியனை தன் பின்னாலேயே லோ லோவென அலையவிட்டுள்ளார். அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கோமதியிடம் பேசாமல் இருந்த பாண்டியன், அவர் மயங்கி விழுந்து ஆஸ்பத்திரியில் இருந்து மீண்டும் வீட்டுக்கு வந்த பின்னர், அவரிடம் பறிந்து பேசி வருகிறார். ஆனால் அவரை லேசாக மன்னித்துவிடக் கூடாது என முடிவு செய்யும் கோமதி, தன் பங்கிற்கு அவரிடம் சற்று கறாராக நடந்து கொள்கிறார். மறுபுறம் காந்திமதி, மீனா ஆகியோரும் கோமதிக்கு சப்போர்டாக செயல்படுகிறார்கள். ஒருகட்டத்தில் கோமதி தான் வீட்டை விட்டு வெளியே செல்கிறேன் என கூறி மீண்டும் பாண்டியனை பயமுறுத்துகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
25
வீட்டை விட்டு வெளியேறிய கோமதி
கோமதி வீட்டை விட்டு வெளிய போறேன் என்று சொன்னதை வீட்டில் உள்ள யாருமே நம்பவில்லை. என்னம்மா காமெடி பண்ணிட்டு இருக்க, மறுபடியும் டிராமா போட போறியா என எல்லோரும் கிண்டலடிக்கிறார். இதனால் கடும் கோபம் கொள்ளும் கோமதி, வீட்டை விட்டு வெளியேறுகிறார். கோமதி வெளியேறியதைப் பார்த்ததும், ராஜியும், அரசியும் அவரை தடுத்து நிறுத்த செல்கிறார்கள். அவர்கள் பேச்சை கேட்காத கோமதி விறுவிறுவென நடையை கட்டுகிறார். உடனே சரவணன், நான் போய் அம்மாவை அழைச்சிட்டு வர்றேன் என சொல்லி கிளம்புகிறார். ஆனால் மீனா அவரை தடுத்து நிறுத்திவிடுகிறார்.
35
பின்னாடியே செல்லும் பாண்டியன்
அப்போது பேசும் கதிர், நீ எதுக்குனே போற, நமக்கு முன்னாடி அம்மாவுக்கு சொந்தம் அப்பா தான். அதனால, அப்பா போய் கூப்பிட்டா தான் அம்மா வருவாங்க. நம்ம அழைச்சு ஒரு பிரயோஜனமும் இல்ல. அதனால அப்பா போய் அம்மாவை சமாதானப்படுத்தி கூட்டிட்டு வரச் சொல்லு என சொல்கிறார். இதையடுத்து கோமதியின் அம்மா காந்திமதி, பாண்டியனிடம், மாப்ள போய் அவளை கூட்டிட்டு வாங்க என சொன்ன உடன் வேறு வழியின்றி கோமதி பின்னாலேயே செல்கிறார் பாண்டியன். அவர் செல்லும் வழியில் தயவு செஞ்சு வீட்டுக்கு வந்துரு என கெஞ்சுகிறார். ஆனால் கோமதி கேட்கவில்லை.
பாண்டியனின் பேச்சைக் கேட்காமல் கோமதி விறுவிறுவென நடந்து செல்கிறார். ரோட்டில் செல்பவர்கள் எல்லாம் பாண்டியனை வேடிக்கை பார்க்கிறார்கள். இதனால் அவருக்கு அவமானமாக இருக்கிறது. இருந்தாலும் கோமதி பின்னாடியே கெஞ்சுகிட்டே போகிறார். மறுபுறம் வீட்டில் இருக்கும் செந்தில், மீனாவிடம் நீ தான் இப்படி ஒரு ஐடியாவை அம்மாவுக்கு கொடுத்தியா என கேட்கிறார். இதனால் டென்ஷன் ஆகும் மீனா, உங்க அம்மா என சின்ன குழந்தையா நாங்க சொல்லி கொடுத்து செய்யுறதுக்கு, அவங்களுக்கு கோபம் வந்து கிளம்பிட்டாங்க, அதுக்கு நான் என்ன பண்றது என செம டோஸ் கொடுக்கிறார்.
55
அடங்க மறுக்கும் கோமதி
இறுதியாக கோமதி ஒரு இளநீர் கடைக்கு சென்று இளநீயை வாங்கி குடித்துவிட்டு, காசு அவர்கிட்ட வாங்கிக் கோங்க என சொல்லிவிட்டு செல்கிறார். பின்னர் காசை கொடுத்துவிட்டு, சரி வா வீட்டுக்கு போகலாம் என அழைக்கிறார் பாண்டியன். இளநீர் வாங்கி கொடுத்ததுக்காக நான் வீட்டுக்கெல்லாம் வர மாட்டேன் என சொல்லி மீண்டும் முரண்டு பிடிக்கிறார் கோமதி. இதனால் அவரை எப்படி சமாதானப்படுத்துவது என்று தெரியாமால் மாட்டிக் கொண்டு முழிக்கிறார் பாண்டியன். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இதன்பின்னர் என்ன ஆனது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.