Ethirneechal Thodargirathu: அமுதா கொலை? கைதான ஜனனி தப்பியோட்டம்! ஆதிக்கம் செலுத்தும் குணசேகரன் - எதிர்நீச்சல் கதையில் அடுத்த திருப்பம் என்ன?

Published : Jan 26, 2026, 02:25 PM ISTUpdated : Jan 26, 2026, 02:26 PM IST

Ethirneechal Thodargirathu, எதிர்நீச்சல் சீரியலில் அமுதாவின் மர்ம மரணத்தால் ஜனனி கைது செய்யப்படுகிறார். போலீஸ் பிடியில் இருந்து தப்பித்து, தன்னை சுற்றி பின்னப்பட்ட சதியை முறியடித்து உண்மைக் குற்றவாளியை ஜனனி கண்டுபிடிப்பாரா என்பதே தற்போதைய கதைக்களம்.

PREV
13
அமுதாவின் மரணம்: பின்னணியில் யார்?

சன் தொலைக்காட்சியின் டாப் சீரியல்களில் ஒன்றான 'எதிர்நீச்சல்' தற்போது விறுவிறுப்பின் உச்சத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. பெண்களின் முன்னேற்றத்தைப் பேசும் கதை என்று ஆரம்பிக்கப்பட்டாலும், சமீபகாலமாக வில்லன் குணசேகரனின் கை ஓங்கியிருப்பது ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய எபிசோட்களில், ஜனனியிடம் வேலை கேட்டு வந்த அமுதா என்ற பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அமுதாவின் திடீர் மரணம் ஜனனி, தர்ஷினி மற்றும் பார்கவி ஆகியோரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த மரணம் தற்கொலையா அல்லது திட்டமிட்ட கொலையா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், பழியை ஜனனி மீது சுமத்த சதி நடப்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

23
ஜனனி கைது - எதிர்பாராத தப்பியோட்டம்!

அமுதாவின் மரணம் தொடர்பாக போலீசாரால் ஜனனி அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டப்போராட்டம் ஒருபுறம் இருக்க, தற்போது சமூக வலைதளங்களில் கசிந்துள்ள ஒரு புகைப்படம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பரபரப்புத் தகவல்

போலீஸ் பிடியில் இருந்து ஜனனி தப்பித்துச் செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.தன்னைச் சுற்றி பின்னப்பட்டிருக்கும் சதியை முறியடிக்கவும், உண்மைக் குற்றவாளியைக் கண்டறியவும் ஜனனி தலைமறைவு வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கலாம் எனத் தெரிகிறது.

https://www.instagram.com/p/DT9wmXGgW6N/?utm_source=ig_embed&ig_rid=eb12decb-fbf5-411a-8b74-6a04f1313130

33
குணசேகரனின் ஆதிக்கம்: ரசிகர்கள் அதிருப்தி

சீரியலின் தற்போதைய நகர்வு குறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் குமுறல்களை வெளிப்படுத்தி வருகின்றனர்:

குண்டாஸ் வழக்கு என்னவானது?

பல தவறுகளைச் செய்த குணசேகரன் மிக எளிதாக வழக்குகளில் இருந்து தப்பி வருவது யதார்த்தத்திற்கு அப்பாற்பட்டு இருப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.

பெண்களுக்குத் தொடரும் சோகம்

பெண்களின் எழுச்சியை மையப்படுத்திய கதையில், தொடர்ந்து பெண்களுக்கு மட்டுமே துன்பங்கள் நேர்வது ஏமாற்றம் அளிப்பதாகக் கூறுகின்றனர்.

மீண்டும் அடிமைத்தனம்

குணசேகரன் மீண்டும் பழையபடி பெண்களை ஒடுக்கத் தொடங்கியிருப்பது கதையின் வேகத்தைக் குறைப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

முக்கிய கேள்வி

ஜனனி தலைமறைவாக இருந்து குணசேகரனின் முகத்திரையைக் கிழிப்பாரா? அல்லது மீண்டும் குணசேகரனின் சூழ்ச்சியில் ஈஸ்வரி குடும்பம் சிக்கப் போகிறதா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Read more Photos on
click me!

Recommended Stories