அம்மா சென்டிமெண்ட வச்சு கொலை செய்ய சொன்னாங்க! உண்மையை உடைத்த ரௌடி: உறைந்து போன ஜனனி; எதிர்நீச்சல்..!

Published : Jan 04, 2026, 11:36 AM IST

Janani Murder Plot Rowdy Confession Mother Sentiment : எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் இன்றைய விறுவிறுப்பான எபிசோடில் ஜனனியை கொலை செய்ய முயன்ற ரௌடி பிடிபட்டான். தன்னை கொலை செய்ய அனுப்பியது யார் என்ற உண்மையை கூற, ஜனனி நிலை குலைந்து போயுள்ளார்.

PREV
14
Ethir Neechal Janani Murder Attempt

ஜனனியை கொல்வதற்காக அடியாட்களை செட் செய்து குணசேகரன் அனுப்பி இருப்பார். அதில் முந்தைய நாளில் அந்த கொலைகாரன் ஜனனி தமிழ் சோறு கடைக்குச் சென்று ஜனனியை கொலை செய்வதற்கு முயற்சிப்பான் ஆனால் ஜனனியின் நல்ல குணம் அறிந்த கொலைகாரன் ஜனனியை கொள்வதற்கு மனமின்றி அந்த இடத்தில் இருந்து சென்று விடுவான்.

24
Rowdy Confession in Ethir Neechal Today Episode

கொலைகாரன் - ஜனனி பேசுதல்:

அதன் பின்னர் அந்த கொலைகாரன் ஜனனியை ஒரு இடத்தில் வைத்து தனியாக பேசுகிறான். அக்கா நான் உங்களை கொலை செய்வதற்கு தான் வந்தேன் . என்று கூறும் போது ஜனனியின் ஆடிப் போய்விட்டது என்றே கூறலாம் பதற்றம் அடைந்தார் ஜனனி கொலைகாரன் நான் ஒரு போதை பழக்கத்திற்கு உடையவர் அதனால் எனக்கு ஒரு அப்பா தங்கை மட்டும் இருக்கிறார்கள் எனக்கு பணம் வசதி இல்லாத காரணத்தினால் எனக்கு பண ஆசை காட்டி என்ன கொலை செய்ய அனுப்புனாங்க ஆனா உங்க நல்ல மனச நான் பார்த்தேன் இங்க ஓடி ஓடி வேலை பார்த்தீங்க நீங்க சாப்பிடும்போது சொன்ன ஒரு வார்த்தை என் மனசு உடைச்சிடுச்சு என்றெல்லாம் அந்த கொலைகாரன் கூறுகிறான்.

34
Who tried to kill Janani in Serial?

கொலைகாரனை காப்பாற்றும் ஜனனி:

நீங்க இந்த விஷயத்தை போலீஸ்ல பொய் சொன்னா கூட நான் அப்படியே வந்து சொல்றேன் என்று கொலைகாரன் கூறுகிறான் ஆனால் அதற்கு ஜனனி நான் போலீஸ் கம்ப்ளைன்ட் எல்லாம் கொடுக்க மாட்டேன். உன் உன் வாழ்க்கைக்கு நான் தவறு செய்ய மாட்டேன் என்று ஜனனி கூறுகிறார் உன் அப்பா தங்கச்சி மேல இவ்வளவு பாசம் வச்சிருக்கியா அப்புறம் ஏன் உனக்கு இந்த போதை பழக்கம் நல்லா வாலு என்று புத்திமதி கூறுகிறார் ஜனனி. நீ நல்லா வரணும் தங்கச்சியை நல்லபடியா பாத்துக்கோ என்று அவருக்கு ஆறுதலாக கூறுகிறார் ஜனனி.

44
Ethir Neechal Continued Serial Update 2026

குணசேகரனை அடையாளம் காட்டும் கொலைகாரன்:

அதன் பின்னர் ஜனனி இந்த போட்டோல இருக்கிறவர் தான் என்னை கொலை செய்ய அனுப்புனாரா என்று கொலைகாரனிடம் திறனை கேட்கிறார் அந்த போட்டோல இருக்கும் படத்தை கொலைகாரன் பார்த்து ஆமா அக்கா இவங்கதான் அண்ணன் தம்பி மூணு பேரு தான். இவங்க தான் கொலை செய்ய அனுப்புனாங்க . என்று புகைப்படத்தின் மூலம் அடையாளம் காட்டுகிறார் கொலைகாரன் அதன் பின்னர் ஜனனி உன் நம்பர் மட்டும் எனக்கு கொடு நான் ஏதாவது டவுட்னா உனக்கு கேட்கிறேன் என்று கூறுகிறார்.

குணசேகரனின் உண்மை முகம் வெளிவந்தது:

கொலைகாரன் சொல்வதைக் கேட்ட ஜனனி மிகவும் அதிர்ச்சியில் உள்ளார் இப்படி ஒரு செயலை செய்வதற்கு குணசேகரனுக்கு எப்படி மனமே வந்தது என்று மனக்குழப்பத்திலேயே இருந்து வருகிறார் ஜனனி அத்துடன் இந்த எபிசோடு முடிந்தது. அடுத்து என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories