ஜனனியை ஒழிக்கத் துடிக்கும் தேவசகாயம்! நடுரோட்டில் நடக்கப்போகும் விபரீதம்? திடுக்கிடும் திருப்பத்தில் எதிர்நீச்சல் தொடர்கிறது!"

Published : Mar 22, 2026, 12:23 PM IST

எதிர்நீச்சல் தொடர்கிறது' சீரியலில் ஆதி குணசேகரனை விட மிகக் கொடூரமான வில்லனாகத் உருவெடுத்துள்ள தேவசகாயத்தால் ஜனனியின் உயிருக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
15
Devasagayam plan against Janani

பரபரப்பான திருப்பங்களுடன் தொடர்ந்து ரசிகர்களை ஈர்த்து வரும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தற்போது கதைக்களம் மிகுந்த பதட்ட நிலைக்கு சென்று உள்ளது. முக்கிய வில்லன் ஒலிவர் தேவசகாயம், ஜனனி எங்கு இருக்கிறார் என்று கண்டு பிடித்ததும், அவளை உயிருடன் விடாமல் முடிக்கத் திட்டமிடுகிறார். இதற்காக அவர் தனது நம்பிக்கைக்குரிய ஆட்களை அனுப்பி, ஜனனியை தேடி பிடிக்க உத்தரவிடுகிறார்.

இடம் வாங்கி வீடு கட்டிய கார்த்திக் – பிரம்மாண்ட ஆடம்பரமான வீட்டை ரேவதிக்கு திருமண நாள் பரிசாக கொடுக்கும் கார்த்திக்!

25
Ethirneechal Thodargiradhu shooting spot updates

பரபரப்பான திருப்பங்களுடன் தொடர்ந்து ரசிகர்களை ஈர்த்து வரும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தற்போது கதைக்களம் மிகுந்த பதட்ட நிலைக்கு சென்று உள்ளது. முக்கிய வில்லன் ஒலிவர் தேவசகாயம், ஜனனி எங்கு இருக்கிறார் என்று கண்டு பிடித்ததும், அவளை உயிருடன் விடாமல் முடிக்கத் திட்டமிடுகிறார். இதற்காக அவர் தனது நம்பிக்கைக்குரிய ஆட்களை அனுப்பி, ஜனனியை தேடி பிடிக்க உத்தரவிடுகிறார்.

35
Sun TV Ethirneechal Thodargiradhu

இதற்குள், தேவசகாயத்தின் ஆட்கள் ஜனனி மற்றும் சக்தி பயணம் செய்யும் காரை கண்டுபிடித்து, அவர்களை வேகமாக துரத்தத் தொடங்குகிறார்கள். ஆபத்தான சூழலில் சிக்கிய இருவரும் தப்பிக்க போராடி, அருகிலிருந்த ஒரு முதிய பெண்மணியின் வீட்டில் தஞ்சம் புகுகின்றனர். அங்கு, ஜனனி கர்ப்பமாக இருப்பதை அறிந்த அந்த பாட்டி, அவளுக்கு சத்தான உணவுகளை வழங்கி அன்புடன் கவனித்துக் கொள்கிறார். இந்த மனிதநேய தருணம் கதையில் ஒரு உணர்ச்சிமிக்க மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

ரூ.14.45 கோடி முதலீடு; ரூ.35 லட்சம் லாபம்; 2 அடுக்குமாடி சொகுசு அபார்ட்மெண்டை விற்று தப்புக்கணக்கு போட்ட பிரபு தேவா!

45
Shakti in fear of Devasagayam

மறுபுறம், தேவசகாயம் தனது ஆட்களிடம் மேலும் கடுமையான உத்தரவை வழங்குகிறார். “நாம் அவளைத் தேடுகிறோம் என்பது இப்போது அவளுக்குத் தெரிந்திருக்கும். அவள் போலீசிடம் சென்று விடுவதற்குள் அவளது கதையை முடித்துவிட வேண்டும். அவள் உயிருடன் இந்த மலையை விட்டு வெளியேறக் கூடாது” என்று அவர் எச்சரிக்கிறார். இதனால் நிலைமை மேலும் தீவிரமடைகிறது. சில நேரங்களில், அந்த அடியாட்கள் பாட்டியின் வீட்டை அடைந்து, ஜனனி மற்றும் சக்தி குறித்து விசாரிக்கிறார்கள். ஆனால், அந்த முதியவர் தைரியமாக எதையும் வெளிப்படுத்தாமல் அவர்களை அனுப்பிவிடுகிறார். இதற்காக சக்தி நன்றியை தெரிவித்து, ஜனனியுடன் அங்கிருந்து வெளியேறுகிறார்.

55
Ethirneechal Thodargiradhu Today Episode Update

ஆனால் அபாயம் இன்னும் விலகவில்லை. அவர்கள் மீண்டும் பயணிக்கத் தொடங்கியதும், தேவசகாயத்தின் ஆட்கள் அவர்களை மீண்டும் கண்டுபிடித்து துரத்தத் தொடங்குகின்றனர். இந்த சிக்கலான சூழ்நிலையில், ஜனனி மற்றும் சக்தி எப்படி தப்பிக்கப் போகிறார்கள் என்பது அடுத்த கட்டத்தில் தெரியும். தொடர்ந்து திருப்பங்களுடன் நகரும் இந்தக் கதை, ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தி வருகிறது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories