தம்பிகளை பிளாக்மெயில் பண்ணி காரியத்தை முடித்த ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்

Published : Mar 05, 2026, 01:00 PM IST

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரன் தன்னுடைய தம்பிகளை எமோஷனல் பிளாக்மெயில் செய்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கி உள்ளார். அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
15
Ethirneechal Thodargiradhu Serial Today Episode

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரன் தான் மீண்டும் ஜெயிலுக்கு செல்ல இருக்கும் விஷயத்தை அனைவர் முன்னிலையிலும் போட்டுடைத்துள்ள நிலையில், ஜெயிலுக்கு போகும் முன் தன் பெயரில் உள்ள சொத்துக்களை நிர்வகிக்கும் பொறுப்பை தன்னுடைய தம்பிகளிடம் வழங்க முடிவெடுத்து, இதற்காக ஆடிட்டரை வர வைத்து, அதற்கு தேவையான டாக்குமெண்டுகளில் தன் தம்பிகளை கையெழுத்து போடச் சொல்கிறார். ஆரம்பத்தில் இதற்கு அவரது தம்பிகள் மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

25
வீட்டை விட்டு வெளியேறிய ஆதி குணசேகரன்

தம்பிகள் கையெழுத்து போட மறுத்ததால் கடுப்பான ஆதி குணசேகரன் உடனடியாக வீட்டைவிட்டு வெளியேறினார். நீங்கள் கையெழுத்து போடாவிட்டால், இந்த வீட்டுக்குள் நான் வரமாட்டேன் என சொல்கிறார். இதனால் வேறு வழியின்றி தாங்கள் கையெழுத்து போட்டு கொடுப்பதாக சொல்கிறார்கள். பின்னர் வீட்டுக்குள் சென்றதும், ரேணுகாவை சொம்பில் பால் எடுத்து வரச் சொல்லி, அதனை மீனாட்சி முன் வைத்து அதில் சத்தியம் செய்துவிட்டு கையெழுத்து போடுமாறு கூறுகிறார். அவரின் பேச்சைக் கேட்டு, கதிரும், ஞானமும் சத்தியம் செய்துவிட்டு அந்த பேப்பரில் கையெழுத்து போடுகிறார்கள்.

35
சத்தியம் பண்ணிய தம்பிகள்

இதையடுத்து ஜனனியின் ரூமுக்கு சென்ற ரேணுகா மற்றும் நந்தினி, அவரை சாப்பிடச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். அவரோ தான் எது சாப்பிட்டாலும் வாந்தி வருவதாக கூறி சாப்பிட மறுக்கிறார். அதன்பின்னர் சக்தியிடம் சொல்லி, வாந்தி நிற்பதற்கு மாத்திரை வாங்கி வரச் சொல்கிறார்கள். பின்னர் நந்தினி தன்னுடைய ரூமுக்கு சென்று தைலம் எடுக்க சென்ற நிலையில், அவருக்கு ஸ்கூலில் இருந்து போன் வருகிறது. அப்போது அவருடைய மகள் தாராவைப் பற்றி பேசுகிறார்கள். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் வீட்டில் சண்டை, அதனால் தான் தன்னால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை என சொல்வதாக சொல்கிறார்.

45
அறிவுக்கரசிக்கு செம டோஸ் கொடுத்த விசாலாட்சி

பின்னர் ரூமில் சக்தியின் மடியில் படுத்திருக்கும் ஜனனியிடம் நைட்டு தூங்குனியா இல்லையா என சக்தி கேட்க, இரவு தூக்கமே வரவில்லை எனக் கூறும் ஜனனி, ரொம்ப டிஸ்டர்ப் ஆக இருந்தது என சொல்கிறார். மறுபுறம் அறிவுக்கரசி வீட்டிற்குள் வந்து ஹாலில் உள்ள மீனாட்சி போட்டோவின் முன் விளக்கு பொறுத்தப் பார்க்கிறார். அப்போது ரூமில் இருந்து வெளியே வரும் விசாலாட்சி, அவரைத் தடுத்து நிறுத்தி, நீ இதெல்லாம் பண்ணக் கூடாது என தடுக்கிறார். நான் விளக்கு பொறுத்தக் கூடாதா என கேட்க, அதற்கு விசாலாட்சி, நீ உங்க வீட்ல போய் பண்ணு, இங்க பண்ணாத என திட்டுகிறார்.

55
பிரச்சனை பண்ணும் ஞானம்

இதையடுத்து விளக்கு பொறுத்தாமல் வெளியே செல்கிறார் அறிவுக்கரசி. பின்னர் காஃபி கொடுக்க வந்த ரேணுகாவிடம், நந்தினியை பற்றி விசாரிக்கிறார் விசாலாட்சி. அப்போது அவரும், கதிரும் ஸ்கூலுக்கு சென்றிருப்பதாக சொல்கிறார். இதைக்கேட்டு ஷாக் ஆகும் ஞானம். உடனே தன் பங்கிற்கு பாச மழை பொழிய வேண்டும் என முடிவெடுத்து, உடனே தன்னுடைய மகள் ஐஸ்வர்யாவை பார்க்க செல்லலாம் என கிளம்புகிறார். அவரை தடுத்து நிறுத்தும் ரேணுகா, எதுக்காக போகணும் என துருவி துருவி கேட்கிறார். இதையெல்லாம் மாடியில் இருந்தபடி கேட்டுக் கொண்டிருக்கிறார் குணசேகரன். இதையடுத்து என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories