எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனிக்கு தேவசகாயம் மூலம் அனைத்து உண்மைகளும் தெரியவந்திருக்கிறது. இதன் பின்னர் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நந்தினி மற்றும் ரேணுகாவிடம் இருந்து விவாகரத்து கேட்ட கதிர் மற்றும் ஞானத்திடம், தாங்கள் உறவுக்காரர்கள் முன்னிலையில் தான் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போடுவோம் என அவர்களின் மனைவிகள் சொல்லிவிட, மறுதினமே உறவினர்கள் அனைவரையும் வர வைத்து கையெழுத்து போடச் சொன்னார் கதிர். ஆனால் அந்த விவாகரத்து பத்திரத்தில் என்ன எழுதி இருக்கிறது என்பதை படித்துக் காட்டிய நந்தினி, தனக்கு இந்த சொத்தில் இருந்து 20 சதவீத பங்குகளை கொடுத்தால் தான் கையெழுத்து போடுவேன் என சொல்லிவிட்டார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
24
ஆதி குணசேகரனின் அடுத்தக்கட்ட ஆக்ஷன்
நந்தினியின் தடாலடி முடிவால் தம்பிகளுக்கு டைவர்ஸ் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்கிற ஆதி குணசேகரனின் பிளான் மொத்தமும் சொதப்பியது. அதுமட்டுமின்றி வந்திருந்த உறவினர்கள் அனைவரும் இதனால் நாம் வம்பில் சிக்கி விடுவோமோ என பயந்து எஸ்கேப் ஆகிவிட்டார்கள். இந்த நிலையில் தன் தம்பிகளை மாடிக்கு அழைத்துச் சென்று, அங்கு வைத்து அடுத்து என்ன செய்யலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார் ஆதி குணசேகரன். அப்போது அடுத்து என்ன செய்யலாம் என கதிர் கேட்க, அதற்கு ஆதி குணசேகரன், நான் உங்களுக்கு ஒன்னு சொல்லனும்னா, நீங்க உங்க பொண்டாட்டிகளை அடக்கி வையுங்க, இல்லேனா அடக்கம் பண்ணீருங்க என கூறுகிறார்.
34
ஜனனிக்கு தெரியவரும் உண்மை
கீழே விசாலாட்சியும், ரேணுகாவும் பேசிக் கொண்டிருக்கையில், எதுவும் திட்டம் போடுறாங்களா என விசாலாட்சி கேட்க, உங்க மூத்த மகன் தான் போடுவாரு, மத்தவங்கள்லாம் சுத்தி வாயப்பாத்துகிட்டு உட்காந்துட்டு இருப்பாங்க என நக்கலடிக்கிறார். மறுபுறம் தேவசகாயம், ஜனனியிடம் வெளியே என்ன நடக்கிறது என்பதை ஒவ்வொன்றாக சொல்கிறார். குறிப்பாக உங்களுக்கு உதவியாக இருந்த மதிவதினி என்கிற கலெக்டரின் பதவி பறிக்கப்பட்டு அவரை காத்திருப்பு பட்டியலில் போட்டிருக்கிறார்கள். அதேபோல் கொற்றவையையும் இந்த கேஸில் இருந்து விலக்கியே வைத்திருக்கிறார்கள் என சொல்கிறார்.
தேவசகாயம் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சி அடையும் ஜனனி, எனக்கு உதவி பண்ணுனவங்களுக்கெல்லாம் இப்படியா நடக்கணும் என ஃபீல் பண்ணுகிறார். அவரை சமாதானப்படுத்தும் தேவசகாயம், நீங்க கவலைப்படாதீங்க, சீக்கிரமே இந்த பிரச்சனையில் இருந்து உங்களை வெளியே கொண்டு வருகிறேன் என சொல்கிறார். இதன்பின்னர் என்ன ஆனது? ஜனனி இந்த பொய் கேஸில் இருந்து தப்பித்தாரா? ஆதி குணசேகரனின் பேச்சைக் கேட்டு நந்தினியையும், ரேணுகாவையும் அவரது தம்பிகள் தீர்த்துக் கட்டப்போகிறார்களா? தேவசகாயம் பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன? என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.