சௌந்தரபாண்டி செய்த சூழ்ச்சியால் சண்முகத்தை சந்தேகப்படும் பரணி - அண்ணா சீரியலில் செம்ம டுவிஸ்ட்

Published : Dec 11, 2023, 03:52 PM IST

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் மருத்துவமனை வைக்க பிளான் போட்டுக் கொண்டிருந்த நிலையில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

PREV
14
சௌந்தரபாண்டி செய்த சூழ்ச்சியால் சண்முகத்தை சந்தேகப்படும் பரணி - அண்ணா சீரியலில் செம்ம டுவிஸ்ட்
Anna serial

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மருத்துவமனை வைக்க வாடகைக்கு எடுக்க உள்ள இடத்திற்கு சென்று எல்லோரும் எதை எப்படி ரெடி பண்ணுவது என பிளான் போட்டுக் கொண்டிருந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

24
zee tamil Anna serial

பேச்சுவார்த்தையில் ஹாஸ்பிடலுக்கு யார் பெயரை வைக்கலாம் என்ற கேள்வி எழ கனி அண்ணன் பெயர் வைக்கலாம் என்று ஐடியா கொடுக்க பரணி அவன் பெயர் எல்லாம் வைக்க முடியாது என ஷாக் கொடுக்கிறாள். அதனைத் தொடர்ந்து வீட்டுக்கு வந்த ரத்னா சண்முகத்திடம் பரணி மாடசாமியிடம் வட்டிக்கு பணம் வாங்கும் விஷயத்தை சொல்ல அவன் பரணியிடம் அந்த மாடசாமி கிட்ட எல்லாம் பணம் வாங்க வேண்டாம் அவன் மோசமான ஆளு என்று சொல்ல வட்டி கொடுக்கலனா தானே பிரச்சனை, நான் அதெல்லாம் சரியா கொடுத்துடுவேன் உனக்கு என்ன வந்துச்சு என சொல்லி விடுகிறாள். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

34
Anna serial update

பிறகு பரணி மாடசாமியை சந்திக்க வர இங்கே மாடசாமி சௌந்தரபாண்டிக்கு போன் போட்டு பரணி பணம் கேட்ட விஷயத்தை சொல்ல அவர் அவ ஆரம்பிக்கப்போறது இலவச ஆஸ்பத்திரி, அதுல போட்ட பணம் வருமான்னு தெரியாது. நாளைக்கு அவ பணம் கொடுக்கலைன்னு அவகிட்ட போய் பிரச்சனை பண்ண உன்ன சும்மா விடமாட்டேன் என்று எச்சரிக்கிறார். மாடசாமி போனில் பேசிக் கொண்டிருப்பதை பரணி பார்த்து விடுகிறாள். பிறகு அவர் பரணியிடம் நீ இலவச ஆஸ்பத்திரி கட்டுற, திருப்பி எனக்கு பணம் கொடுப்பியான்னு தெரியல அதனால உனக்கு பணம் தர முடியாதுன்னு சொல்லி அனுப்பி விட சண்முகம் தான் போனில் பேசியது என தவறாக புரிந்து கொள்கிறாள் பரணி. 

44
Anna serial today episode

இதை தொடர்ந்து வீட்டுக்கு வந்த பரணி சண்முகத்திடம் நீதான் மாடசாமிக்கு போன் போட்டு பணம் கொடுக்க வேண்டாம் என்று சொல்லி இருக்கேனு சண்டை போட அவன் எனக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை என்று எடுத்து சொல்ல முயற்சி செய்ய பரணி நம்ப மறுக்கிறாள். வைகுண்டம் மற்றும் தங்கைகள் என எல்லோரும் சண்முகத்தை தவறாக புரிந்து கொள்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்... சினிமா போல் பிசினஸிலும் கொடிகட்டிப் பறக்கும் நடிகர் ஆர்யாவிற்கு இத்தனை கோடி சொத்துக்கள் உள்ளதா?

Read more Photos on
click me!

Recommended Stories