எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் ஈஸ்வரியை தூண்டிவிட்டு அவர் மூலம் ஜனனியை பழிவாங்க திட்டமிட்டுள்ளார் ஆதி குணசேகரன்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் கதிர் உடன் சண்டைபோட்ட ஜனனி, வீட்டை விட்டு வெளியேறி இருக்கும் நிலையில், அவர் மதிவதினியிடம் சென்று ஆதி குணசேகரனை எப்படியாவது ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும் என்று பேசியதை தன்னுடைய ரகசிய கேமராவில் படம்பிடித்த ராவணன், அதனை ஆதி குணசேகரனுக்கு அனுப்பி விட்டிருக்கிறார். அதைப்பார்த்த குணசேகரன், அந்த வீடியோவை ஈஸ்வரியிடம் காட்டி, இவ நம்ம குடும்பத்தை நல்லாவே இருக்க விடமாட்டாம்மா என பேசி டிராமா போடுகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
25
ஜனனியை அழைத்துவர சொல்லும் ஈஸ்வரி
அந்த வீடியோவை பார்த்ததும் அதிரடி முடிவெடுக்கும் ஈஸ்வரி ஜனனியை வீட்டுக்கு வர சொல்கிறார். ஆனால் ஜனனி, அவருக்கு பதிலாக சக்தியை அந்த வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார். அங்கு சக்தி வந்ததும், அவரிடம் அந்த வீடியோவை காட்டுகிறார்கள். அதைப்பார்த்த சக்தி இது எப்படி லீக் ஆச்சு என ஷாக் ஆனது ஒருபுறம் இருக்க, மறுபுறம் அதில் ஜனனி எதுவும் தப்பா பேசலையே என சப்போர்ட் பண்ணுகிறார். அப்போது அவரை தடுத்து நிறுத்தும் ஈஸ்வரி, சக்தி ஜனனி இப்போ இந்த வீட்டுக்கு வரணும் என ஆர்டர் போடுகிறார். இதனால் வேறு வழியின்றி ஜனனியை அழைத்துவர செல்கிறார் சக்தி.
35
வீட்டுக்கு வர மறுக்கும் ஜனனி
பின்னர் ஜனனியிடம் சென்று விஷயத்தை சொல்லும் சக்தி, இதெல்லாம் எப்படி லீக் ஆச்சு என்பதை கண்டுபிடிக்க வேண்டும். நீ இப்போ பேசுனது மட்டுமில்ல, ஏற்கனவே நீ மதிவதினி மேடம் கிட்ட பேசுன ஆடியோவும் வெளிய வந்திருக்கு என சக்தி சொல்ல, இதெல்லாம் யார் செய்யும் வேலை என்பது தெரியாமல் குழம்பிப் போகிறார் ஜனனி. அதுமட்டுமின்றி நீ இப்போ அங்க போனா பிரச்சனை தான் பெரிதாகும், அதனால் இப்போதைக்கு அந்த வீட்டுக்கு நீ செல்ல வேண்டாம் என்று கூறும் சக்தி, ஈஸ்வரிக்கும் போன் போட்டு, ஜனனி இப்போ வரலேன்னு சொல்லிட்டா அண்ணி என சொல்லிவிடுகிறார்.
மறுபுறம் தன்னுடைய தம்பிகளான கதிர் மற்றும் ஞானத்தை தனியாக அழைத்து பேசும் ஆதி குணசேகரன். ஜனனியை வீட்டை விட்டு துரத்திவிடனும்னு நினைக்காதீங். இங்க வச்சே அவளை பந்தாடணும் என சொல்கிறார். அதுமட்டுமின்றி ஈஸ்வரியை தற்போது தன் பக்கம் இழுத்துள்ள அவர், ஈஸ்வரி தனக்கு சப்போர்டாக இருப்பார் என்கிற மிதப்பில் அவரை வைத்தே ஜனனியை பழிவாங்கவும் முடிவெடுத்துள்ளார். இதுதான் சரியான நேரம், அவளை இதோடு முடிச்சுவிட்றுங்க என தன் தம்பிகளிடம் சொல்கிறார். இதனால் ஜனனிக்கு ஆபத்து காத்திருக்கிறது என்பது மட்டும் உறுதி.
55
ட்விஸ்ட் என்ன?
வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் ஆதி குணசேகரன் ஏதோ கேம் ஆடுகிறார் என்பது மட்டும் ஜனனிக்கு தெரிகிறது. அதுமட்டுமின்றி வீட்டில் கேமரா இருக்கும் விஷயத்தை மதிவதினியிடம் ஜனனி சொல்வாரா? ஈஸ்வரியிடம் உண்மையை கூறி ஆதி குணசேகரனின் மாஸ்டர் பிளானை உடைப்பாரா ஜனனி? அல்லது ஈஸ்வரி ஆதி குணசேகரனின் பேச்சைக் கேட்டு ஜனனியை பழிவாங்க உள்ளாரா? என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. இதனால் இனி வரும் எபிசோடுகள் அனல்பறக்கும் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.