போட்டியாளர்களுடன் பேசும் ஆனந்தி, “ஓவர்லேப் பன்றீங்க” என்ற கருத்தை முன்வைக்கிறார். ஆனந்தியின் இந்த கருத்துக்கு லட்சுமி பிரியா, “முடிந்தால் மேல பேசி உன் வாய்ஸை கேட்க வை”, வேற எப்படி பேசுவது என்று காட்டமாக பேசுகிறார்.
புதிய போட்டியாளராக வீட்டிற்குள் வந்த சில நேரத்திலேயே ஆனந்தி மற்றும் லட்சுமி பிரியா இடையே ஏற்பட்டுள்ள இந்த கருத்து மோதல், பிக்பாஸ் வீட்டில் புதிய பிரச்னைக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளதா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே வீட்டில் கேப்டன்சி, நாமினேஷன் உள்ளிட்ட விவகாரங்களால் போட்டியாளர்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வரும் நிலையில், தற்போது “ஓவர்லேப்” என்ற ஒரு விஷயம் புதிய விவாதமாக மாறியுள்ளது.
குறிப்பாக முதல் வாரத்தில் கேப்டன்சி தொடர்பாக ஷாதிகா உள்ளிட்ட போட்டியாளர்களிடையே விவாதங்கள் ஏற்பட்டிருந்தன. வார இறுதி நிகழ்ச்சியிலும் போட்டியாளர்களின் தலைமைப் பண்பு குறித்து விஜய் சேதுபதி கேள்வி எழுப்பியிருந்தார்.