ஷூட்டிங் ஸ்பாட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட 20 வயது சீரியல் நடிகை - சோகத்தில் ரசிகர்கள்

First Published Dec 25, 2022, 2:26 PM IST

20 வயது நடிகையின் தற்கொலை முடிவுக்கு அவருடன் சீரியலில் நடித்த சக நடிகர் தான் காரணம் என போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தியில் புகழ்பெற்ற தொலைக்காட்சி தொடரான 'அலி பாபா: தஸ்தான்-இ-காபூல்' என்கிற தொடரில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் துனிஷா சர்மா. இவருக்கு வயது 20. இவர் நேற்று (சனிக்கிழமை) மும்பையில் உள்ள ஸ்டூடியோவில் நடைபெற்ற அலி பாபா சீரியலின் ஷூட்டிங்கில் பங்கேற்க சென்றுள்ளார். 

அப்போது உணவு இடைவெளியின் போது மதியம் 3 மணியளவில் சக நடிகரான ஷீசான் கானின் மேக் அப் அறையில் உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார். உள்ளே சென்றவர் வெகுநேரம் ஆகியும் வெளியே வராததால், அங்கிருந்த பணியாளர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது, உள்ளே நடிகை துனிஷா தூக்கில் தொங்கியபடி பிணமாக இருந்துள்ளார்.

இதையும் படியுங்கள்... நயன்தாரா குறித்து ஆபாசமாக கமெண்ட் போட்ட நெட்டிசன்கள்... செருப்படி பதில் கொடுத்த சின்மயி

இதைப்பார்த்து பதறிப்போன சீரியல் குழுவினர், போலீசுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், நடிகை துனிஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். நடிகை துனிஷா தற்கொலை செய்துகொள்ளும் முன் கடிதம் எதுவும் எழுதிவைக்காததால், இச்சம்பவம் குறித்து அங்குள்ள சீரியல் குழுவினரிடம் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது. 

நடிகை துனிஷாவின் இந்த தற்கொலை முடிவுக்கு அவருடன் சீரியலில் நடித்த சக நடிகரான ஷீசான் கான் தான் காரணம் என துனிஷாவின் தயார் கொடுத்த புகார் கொடுத்துள்ளார். இதன் அடிப்படியில் ஷீசான் கானை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். துனிஷாவை காதலித்து வந்த ஷீசான் கான் கடந்த 15 நாட்களுக்கு முன்னர் அவரை பிரேக் அப் செய்து பிரிந்ததாகவும், இதனால் மன அழுத்தத்தில் இருந்த துனிஷா தற்கொலை முடிவை எடுத்ததாக போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படியுங்கள்... கவர்ச்சி புகைப்படங்களுடன் கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்லி... ரசிகர்களை கிறுகிறுக்க வைத்த தர்ஷா குப்தா

click me!