இதற்கிடையில், ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து, Zohoவின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீதர் வேம்பு தனது எக்ஸ் (X) பக்கத்தில் இதுகுறித்து ஒரு பதிவையும் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், "எங்கள் குறைக்கடத்தி உற்பத்தி ஆலை முதலீட்டுத் திட்டம் தொடர்பாக, இந்த வணிகம் அதிக முதலீடு தேவைப்படும் ஒன்று என்பதாலும், அரசு ஆதரவு அவசியம் என்பதாலும், வரி செலுத்துவோரின் பணத்தை பயன்படுத்துவதற்கு முன்பு தொழில்நுட்பப் பாதையை முழுமையாக உறுதிப்படுத்த விரும்பினோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.