இந்தியாவில் பெரும்பாலானோர் இரண்டு சிம் கார்டுகளை பயன்படுத்துகின்றனர். ஆனால் 2024 ஜூலை முதல் ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி விட்டதால் பல பயனர்கள் பிஎஸ்என்எல் பக்கம் சென்றனர். சிலர் ஒரு சிம் மட்டும் வைத்துக் கொண்டு மற்றொரு சிம்மை க்ளோஸ் செய்தனர். இந்நிலையில், கட்டண உயர்வால் சிரமப்படும் வாடிக்கையாளர்களுக்கு TRAI நற்செய்தியை வழங்கியுள்ளது.
TRAI விதிகளின்படி, இனிமேல் வாடிக்கையாளர்கள் குறைந்த விலையில் நீண்ட காலத்திற்கு சிம்மை இயக்க முடியும். பொதுவாக, ஒவ்வொருவரும் தங்களின் இரண்டாவது சிம்மைத் தனிப்பட்ட முறையில் வைத்திருப்பார்கள். இந்த எண் நெருங்கிய நபர்களுடன் மட்டுமே பகிரப்படும். விலைவாசி உயர்வு காரணமாக, பலர் தங்களது இரண்டாவது சிம்மை செயலிழக்கச் செய்ய எண்ணினர்.