Social Media சமூக வலைதளங்களுக்கு கிடுக்கிப்பிடி: குழந்தைகளின் பாதுகாப்பில் சமரசம் இல்லை - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அதிரடி! இன்ஸ்டாவுக்கு கிடுக்கிப்பிடி போட்ட மத்திய அரசு!
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் சமூக வலைதளங்கள் நம் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டன. அதே நேரத்தில், அவற்றில் பரவும் பொய்யான தகவல்கள் மற்றும் ஆபாசப் பதிவுகளால் குழந்தைகளின் பாதுகாப்பும், சமூக அமைதியும் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. இதைக் கருத்தில் கொண்டு, சமூக வலைதள நிறுவனங்களுக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
24
பொறுப்பைத் தட்டிக்கழிக்க முடியாது!
டிஜிட்டல் நியூஸ் பப்ளிஷர்ஸ் அசோசியேஷன் (DNPA) மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், டிஜிட்டல் தளங்கள் இனிமேலும் தங்கள் பொறுப்புகளைத் தட்டிக்கழிக்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். "தங்கள் தளங்களில் பகிரப்படும் அனைத்து விதமான பதிவுகளுக்கும் (Content) சமூக வலைதள நிறுவனங்களே முழுப் பொறுப்பேற்க வேண்டும். குறிப்பாக, குழந்தைகளின் ஆன்லைன் பாதுகாப்பை உறுதி செய்வது அவர்களின் கடமை" என்று அவர் ஆணித்தரமாகக் கூறினார். ஆயிரம் ஆண்டுகளாக மனித சமூகம் கட்டியெழுப்பியுள்ள நம்பிக்கையை இந்த நிறுவனங்கள் உணர்ந்து செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
34
டீப்ஃபேக் மற்றும் ஏஐ அச்சுறுத்தல்கள்!
இணையத்தின் பரிணாம வளர்ச்சி பல நன்மைகளைக் கொண்டு வந்தாலும், செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்படும் டீப்ஃபேக் (Deepfake) போன்ற தொழில்நுட்பங்கள் பெரும் சவாலாக மாறியுள்ளன. ஒருவரின் முகத்தையோ, குரலையோ அல்லது தனிப்பட்ட அடையாளத்தையோ அவர்களின் அனுமதியின்றி ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்குவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தினார். நடக்காத ஒரு விஷயத்தை நடந்தது போல நம்ப வைக்கும் டீப்ஃபேக் வீடியோக்களால், சமூகத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள நம்பிக்கை சிதைக்கப்படுவதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.
நீதித்துறை, ஊடகம், குடும்பம் என மனிதனால் உருவாக்கப்பட்ட அனைத்து அமைப்புகளும் 'நம்பிக்கை' (Trust) என்ற அடித்தளத்தின் மீதே இயங்குகின்றன. ஊடகங்களின் நம்பகத்தன்மை நடுநிலையாகச் செயல்படுவதிலும், செய்திகளை சரிபார்த்து வெளியிடுவதிலுமே அடங்கியுள்ளது. அதே பொறுப்புணர்வு சமூக வலைதளங்களுக்கும் இருக்க வேண்டும். இணையத்தின் தன்மை இப்போது வெகுவாக மாறிவிட்டது; எனவே, சமூகத்தின் அடிப்படைத் தேவைகளுக்கு ஏற்ப, டிஜிட்டல் தளங்கள் தங்களை மாற்றிக்கொண்டு அரசுடன் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளிப்படையாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.