மத்திய அரசின் 'சஞ்சார் சாதி' திட்டத்தின் கீழ் உள்ள 'சக்ஷு' (Chakshu) போர்ட்டல் மூலம் நீங்கள் எளிதாகப் புகாரளிக்கலாம்.
1. முதலில் sancharsaathi.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.
2. முகப்புப் பக்கத்தில் உள்ள 'Citizen Centric Services' பிரிவில் 'Chakshu' என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
3. அங்குத் தோன்றும் படிவத்தில், உங்களுக்கு வந்த அழைப்பின் வகை, நேரம் மற்றும் தேதி போன்ற விவரங்களைப் பூர்த்தி செய்யவும்.
4. பின்னர் உங்கள் தனிப்பட்ட விவரங்களைக் கொடுத்து, மொபைலுக்கு வரும் ஓடிபி (OTP) எண்ணைப் பதிவிட்டுச் சரிபார்க்கவும்.
5. அனைத்து விவரங்களையும் சமர்ப்பித்த பிறகு, உங்கள் புகார் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்படும்.