பிஎஸ்என்எல் 4ஜி
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 4ஜி, 5ஜி என சென்றிருக்கும் நிலையில், மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் இன்னும் 3ஜி சேவயை தான் வழங்கி வருகிறது. நாங்கள் எப்போது தான் 4ஜி சேவையை பெறுவது என பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் ஏங்கித் தவித்து வரும் நிலையில், 4ஜி சேவையை கொண்டு வரும் பணியில் பிஎஸ்என்எல் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
பிஎஸ்என்எல்லின் 4ஜி சேவை வரும் மார்ச் மாதத்துக்குள் வழங்கப்படும் என்றும் இந்த ஆண்டு இறுதிக்குள் 4ஜி சேவை நாடு முழுவதும் முழுமையாக கொண்டு வரப்படும் எனவும் பிஎஸ்என்எல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 4ஜி நெட்வொர்க்கை விரிவுபடுத்துவதற்காக இந்தியாவின் பல்வேறு இடங்களில் டவர்களை நிறுவி வருகிறது.