பிஎஸ்என்எல் பிளான்
இந்தியாவில் மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) மலிவு விலையில் ரீசார்ஜ் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஜியோ, ஏர்டெல், வோடோபோன்ஐடியா ஆகிய தனியார் நிறுவனங்கள் 4ஜி, 5ஜி சேவை என்று சென்று விட்ட நிலையில், இன்னும் 4ஜி சேவையே தொடங்காத நிலையிலும் பிஎஸ்என்எல் பக்கம் ஏராளமான வாடிக்கையாளர்கள் சாய்ந்து வருகின்றனர்.
இதற்கு முக்கிய காரணம் பிஎஸ்என்எல் குறைந்த விலையில் திட்டங்களை செயல்படுத்தி வருவதே. இந்நிலையில், பிஎஸ்என்எல்லின் ஒரு புதிய அறிவிப்பு மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. அதாவது ரூ.5 க்கும் குறைவான விலையில், அன்லிமிடெட் கால்ஸ், பல்க் டேட்டா வழங்கும் திட்டத்தை பிஎஸ்என்எல் கொண்டு வந்துள்ளது.