இந்நிலையில், பிஎஸ்என்எல் அடுத்த மூன்று மாதங்களுக்குள் 5G இணைப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளது. மேலும் புனே, கோயம்புத்தூர், கான்பூர், விஜயவாடா மற்றும் கொல்லம் உள்ளிட்ட நகரங்களில் சோதனை நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. மிக முக்கியமாக, BSNL இன் ஒரு லட்சம் 4க் டவர்கள் முற்றிலும் உள்நாட்டு மற்றும் நெகிழ்வானதாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
அவை 5G தொழில்நுட்பத்திற்கு எளிதாக மேம்படுத்தப்படும். இந்த கோபுரங்கள் ஜூன் 2025 க்குள் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாடிக்கையாளர் வசதியை மேம்படுத்தும் முயற்சியில், BSNL ஏப்ரல் மாதத்தை "வாடிக்கையாளர் சேவை மாதமாக" அறிவித்துள்ளது, இது வாடிக்கையாளர்களுக்கு முதலிடம் கொடுப்பதற்கான அதன் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது.