BSNL 5G: பிஎஸ்என்எல் 5ஜி சோதனை தொடக்கம்! இனி 'இன்டர்நெட்' ஸ்பீடு தெறிக்க போகுது!

அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் 5ஜி சோதனையை தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.

BSNL has announced that it has started 5G trials ray

BSNL has started 5G trials: தனியார் நிறுவனங்கள் ரீசார்ஜ் திட்ட விலைகளை அதிகரித்ததில் இருந்து அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்க்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் மவுசு அதிகரித்து வருகிறது. இதனால் புதிய, கவர்ச்சிகரமான ரீசார்ஜ் திட்டங்களை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தி வருகிறது. அதே நேரத்தில் அதன் நெட்வொர்க் உள்கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களையும் செய்து வருகிறது. 

BSNL has announced that it has started 5G trials ray
BSNL 5G

பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி டவர்கள் நிறுவுவதை அதிகரித்து வருகிறது. மேலும் இப்போது 5ஜி திறன்களை நோக்கி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ET டெலிகாம் அறிக்கையின்படி, தொலைத்தொடர்புத் துறை (DoT) பிஎஸ்என்எல்லுக்கு ரூ.61,000 கோடி மதிப்புள்ள 5ஜி ஸ்பெக்ட்ரத்தை ஒதுக்கியுள்ளது. இது எதிர்காலத்தில் 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்த பச்சைக்கொடி காட்டுகிறது.

பிஎஸ்என்எல்லின் ஸ்பெக்ட்ரமில் இப்போது 700 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 3300 மெகா ஹெர்ட்ஸ் (மிட்-பேண்ட்) போன்ற பிரீமியம் பேண்டுகள் அடங்கும், அவை 5ஜி சேவைகளைப் பயன்படுத்துவதற்கு அவசியமானவை. மேலும், BSNL 5G சோதனையைத் தொடங்கியுள்ளது மற்றும் ஒரு லட்சம் 4G கோபுரங்களை நிறுவும் லட்சிய இலக்கை நிர்ணயித்துள்ளது. ஏற்கனவே பல்வேறு இடங்களில் சுமார் 80 லட்சம் நிறுவல்களை முடித்துள்ளது.

பிஎஸ்என்எல் நோக்கி ஓடி வரும் வாடிக்கையாளர்கள்! 7 மாதங்களில் இத்தனை லட்சம் பேர் சேர்ப்பா?


BSNL 4G

இந்நிலையில், பிஎஸ்என்எல் அடுத்த மூன்று மாதங்களுக்குள் 5G இணைப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளது. மேலும் புனே, கோயம்புத்தூர், கான்பூர், விஜயவாடா மற்றும் கொல்லம் உள்ளிட்ட நகரங்களில் சோதனை நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. மிக முக்கியமாக, BSNL இன் ஒரு லட்சம் 4க் டவர்கள் முற்றிலும் உள்நாட்டு மற்றும் நெகிழ்வானதாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

அவை 5G தொழில்நுட்பத்திற்கு எளிதாக மேம்படுத்தப்படும். இந்த கோபுரங்கள் ஜூன் 2025 க்குள் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாடிக்கையாளர் வசதியை மேம்படுத்தும் முயற்சியில், BSNL ஏப்ரல் மாதத்தை "வாடிக்கையாளர் சேவை மாதமாக" அறிவித்துள்ளது, இது வாடிக்கையாளர்களுக்கு முதலிடம் கொடுப்பதற்கான அதன் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது.

BSNL Recharge Plan

பிஎஸ்என்எல் வழங்கும் ரீசார்ஜ் திட்டங்கள் தனியார் நிறுவனங்களின் திட்டங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் கணிசமாக மலிவு விலையில் உள்ளன. 4ஜி நெட்வொர்க் முழுமையாக கொண்டு வரப்பட்டு இதனைத் தொடர்ந்து 5ஜி சேவையும் கொண்டு வரப்பட்டால் பிஎஸ்என்எல் பக்கம் அதிக வாடிக்கையாளர்கள் சாய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பிஎஸ்என்எல 1 லட்சம் 4ஜி டவர்களை நிறுவும் இலக்கை கொண்டுள்ளது. இதில் சுமார் 75,000 4ஜி டவர்கள் நிறுவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Jio உடன் கைகோர்த்த BSNL! மத்திய அரசுக்கு ரூ.1757 கோடி காலி - CAG வெளியிட்ட அதிர்ச்சி ரிபோர்ட்

Latest Videos

vuukle one pixel image
click me!