இந்தியாவில் விரைவில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இயக்கப்பட உள்ளது. ஆகையால் சென்னை டூ டெல்லி இடையே வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இயக்க்கப்படும் என கூறப்படுகிறது.
இந்த ரயிலில் ஸ்லீப்பர் மட்டுமின்றி உட்காரும் வசதியும் இடம்பெற்றிருக்கும். கூடுதல் பெட்டிகளும் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வந்தே பாரத் ரயில் ஏசி சேர் காரில் 1,805 ரூபாயும், எக்ஸிக்யூடிவ் சேர் காரில் 3,355 ரூபாயும் கட்டணமாக வசூலிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.
எந்தெந்த ரயில் நிலையங்களில் நிற்கும்?
சென்னை டெல்லி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் விஜயவாடா, நாக்பூர், போபால் சந்திப்பு, ஜான்சி சந்திப்பு, குவாலியர் சந்திப்பு ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்ல வாய்ப்புள்ளது. இந்த ரயில் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.