மும்மொழிக்கொள்கையை ஏற்காததால் தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி வழங்க மறுப்பதாகவும், இதற்கு தமிழக முதல்வர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில் மும்மொழிப் பாடத்திட்டம் இருப்பதாகவும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் ஏன் ஓரவஞ்சனை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
முதல்வர் வீட்டு பிள்ளைகள் இந்தி படிக்கலாம்.! எங்கள் வீட்டு பிள்ளைகள் இந்தி படிக்க கூடாதா.? அண்ணாமலை கேள்வி
மும்மொழிக்கொள்கையை தமிழகம் ஏற்றுக்கொள்ளாத காரணத்தால் மத்திய அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய 2ஆயிரம் கோடியை விடுவிக்காமல் இருந்து வருகிறது. இது தொடர்பாக மத்திய கல்வித்துறை அமைச்சர் கூறுகையில் "மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது" என தெரிவித்திருந்தார். இதற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்குகிறது? எனக் கல்வி அமைச்சரால் கூற முடியுமா?
24
தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்
மாநிலங்களால் ஆனதே இந்திய ஒன்றியம்! ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளதுதான் கல்வி! அதற்கு ஒன்றிய அரசு ஏகபோக எஜமானர்கள் அல்ல! "மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது" என்று blackmail செய்யும் தடித்தனத்தைத் தமிழர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்! எங்கள் உரிமையைத்தான் கேட்கிறோம்! உங்கள் தனிச்சொத்தைக் கேட்பதுபோல் திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும் என தெரிவித்திருந்தார்.
34
எங்கள் வீட்டு பிள்ளைகள் இந்தி கற்ககூடாதா.?
இதற்கு பதில் கொடுக்கும் வகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் உள்ளிட்ட தமிழக அமைச்சர்களின் மகன், மகள் அல்லது பேரன் பேத்திகள் படிக்கும் தனியார் பள்ளிகளில், மும்மொழிகள் பயிற்றுவிக்கலாம். எங்கள் வீட்டுக் குழந்தைகள் பயிலும் அரசுப் பள்ளிகளில், தமிழ், ஆங்கிலம் மற்றும் மூன்றாவது ஒரு இந்திய மொழி என மும்மொழிகள் கற்பிக்கக் கூடாதா?தமிழகம் முழுவதும் திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில், பெரும்பாலும் சிபிஎஸ்இ மும்மொழி பாடத்திட்டமே இருக்கிறது.
44
காலாவதியான கொள்கையை திணிப்பதா.?
அரசுப் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு மட்டும் ஏன் ஓரவஞ்சனை? பணம் இருந்தால் மட்டும்தான் பல மொழிகள் கற்க வேண்டும் என்று கூறுகிறாரா முதலமைச்சர்? தற்போது 2025 ஆம் ஆண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உலகம் வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. இன்னும், உங்கள் 1960களின் காலாவதியான கொள்கையை, தமிழகக் குழந்தைகள் மீது திணிப்பது என்ன நியாயம்? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.