டோட்டலாக மாறும் சென்னை! டபுள் டக்கர் மெட்ரோ குறித்து குட்நியூஸ்! பயணிகள் குஷி!

Published : Mar 07, 2025, 10:06 AM ISTUpdated : Mar 07, 2025, 10:15 AM IST

Chennai Double Decker Metro: மெட்ரோ ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியளிக்கும்விதமாக சென்னையில் டபுள் டெக்கர் மெட்ரோ குறித்து குட்நியூஸ் வெளியாகியுள்ளது. 

PREV
14
டோட்டலாக மாறும் சென்னை! டபுள் டக்கர் மெட்ரோ குறித்து குட்நியூஸ்! பயணிகள் குஷி!

Chennai Double Decker Metro: Launch Date & Latest Updates Revealed: சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்தில் டபுள் டக்கர் மெட்ரோ வரும் 2026ம் ஆண்டில் ஜூலை மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் பெரிய நகரங்களில் ஒன்றான சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் மெட்ரோ ரயில் திட்டங்கள் அமைந்துள்ளன. சென்னையின் பல்வேறு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல் பூந்தமல்லி–போரூர் வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. 

24
Chennai Double Decker Metro

சென்னை சென்ட்ரல் முதல் கோயம்பேடு பரங்கிமலை வழியாக விமான நிலையம் வரையிலும், விம்கோ நகர் முதல் சென்னை சென்ட்ரல், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, கிண்டி வழியாக விமான நிலையம் வரையும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல் மாதவரம்- சோழிங்கநல்லூர், மாதவரம்- சிப்காட், கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி ஆகிய வழித்தடங்களிலும் 118.9 கிமீ தூரத்துக்கு  ரூ.63,246 கோடி மதிப்பில் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. 

ராமேஸ்வரம் - காசி இலவச ஆன்மிக சுற்றுலா.! அறநிலையத்துறையின் அசத்தல் தகவல்

34
Chennai Metro

அதாவது 3வது வழித்தடத்தில் மாதவரம் பால் பண்ணை முதல் சிப்காட் வரை 45.8 கிமீ தூரத்திலும், 
4வது வழித்தடத்தில் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை 26.1 கிலோ மீட்டர் தூரத்திலும், 5வது வழித்தடத்தில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 47 கிலோ மீட்டர் தூரத்திலும் மெட்ரோ ரயில் வழித்தடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த வழித்தடங்களில் மொத்தம் 119 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைய உள்ளன.

மேற்கண்ட இந்த வழித்தடங்களில் கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வழித்தடமும், மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை செல்லும் வழித்தடமும், ஆழ்வார்திருநகர், ஆலப்பாக்கம், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இணைகின்றன. இந்த இடத்தில் இரட்டை  இரண்டடுக்கு மெட்ரோ பாலம் அமைக்கப்பட உள்ளது. இந்த டபுள் டக்கர் மெட்ரோ பாலத்தில் 4 ரயில் நிலையங்கள் அமைக்கப்படும் எனவும் நான்காம் வழித்தடம் 50 அடி உயரத்திலும், ஐந்தாம் வழித்தடம் 70 அடி உயரத்திலும் ஒரே தூணில் இணையும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

44
Double Decker Trains

4 கிலோ மீட்டருக்கு ஒரு டபுள் டக்கர் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளதாகவும், டபுள் டக்கர் மெட்ரோ பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாகவும், இதில் சில பகுதிகளில் பணிகள் முடிக்கப்பட்டு விட்டதாகவும் மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 இரட்டை அடுக்கு மெட்ரோ மேம்பால பணிக்காக பிரத்யேக லாஞ்சிங் கிர்டர் வகையைச் சேர்ந்த ராட்சத இயந்திரங்கள் மற்றும் கிரேன்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பாதையில் சி-4, சி-5 என்று பிரித்து பணிகள் நடைபெற்று வருகின்றன. 

மொத்தம் 340 தூண்களில் கிட்டத்தட்ட 70% தூண்கள் அமைக்கப்பட்டு விட்டதாக மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரட்டை அடுக்கு மெட்ரோ மேம்பால பணிகள் முடிந்து மெட்ரோ ரயில் இயக்கப்பட்டால் அதில் செல்வது பயணிகளுக்கு புது அனுபவமாக இருக்கும்.

விவசாயிகள் வயிற்றில் பாலை வார்த்த தமிழக அரசு! இனி 'இந்த' கட்டணம் கிடையாது!

Read more Photos on
click me!

Recommended Stories