தமிழகத்தில் வானிலை நிலவரம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில், மழையின் தாக்கம் குறைந்து பனியின் தாக்கம் அதிகரித்துள்ளது. பல இடங்களில் குளிரின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் மீண்டும் கன மழைக்கான எச்சரிக்கை வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 05-01-2025 மற்றும் 06-01-2025: கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பொதுவாக காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளது.