மீண்டும் கன மழை எச்சரிக்கை.! இத்தனை மாவட்டங்களிலா.? எப்போ தெரியுமா.? வானிலை மையம் அலர்ட்

Published : Jan 05, 2025, 01:12 PM IST

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இறுதி கட்டத்தை எட்டிய நிலையில், மீண்டும் கனமழைக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.ஜனவரி 11ஆம் தேதி கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

PREV
15
மீண்டும் கன மழை எச்சரிக்கை.! இத்தனை மாவட்டங்களிலா.? எப்போ தெரியுமா.? வானிலை மையம் அலர்ட்
RAIN CHENNAI

தமிழகத்தில் வானிலை நிலவரம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில், மழையின் தாக்கம் குறைந்து பனியின் தாக்கம் அதிகரித்துள்ளது. பல இடங்களில் குளிரின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் மீண்டும் கன மழைக்கான எச்சரிக்கை வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 05-01-2025 மற்றும் 06-01-2025: கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். பொதுவாக காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரங்களில்  ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளது.
 

25
RAIN

வறண்ட வானிலை

07-01-2025: கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். உள்தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். 08-01-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  09-01-2025: கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

35
Puducherry Rains

மீண்டும் மழை எச்சரிக்கை

அதே நேரத்தில் வருகிற 11ஆம் தேதி  கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும்  கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

45
chennai rain

சென்னை வானிலை முன்னறிவிப்பு: 

இன்று (05-01-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும்.
நாளை (06-01-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும்.
 

55
Heavy Rain

மீனவர்களுக்கான எச்சரிக்கை:   
அரபிக்கடல் பகுதிகள்:  

06-01-2025: தென்மேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Read more Photos on
click me!

Recommended Stories