ஆண்டு விழா நடத்தி வேண்டும்
எனவே ஜனவரி மாதம், பிப்ரவரி மாதங்களில் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளிலும், ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை தொடக்க நடுநிலைப் பள்ளிகளிலும் பள்ளிகளின் வசதிக்கேற்ற பெற்றோர்கள்,பொது மக்களின் முன்னிலையில் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற ,நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் கொண்டு சிறப்பாக பள்ளி ஆண்டு விழா நடத்திட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் ஆண்டு விழா நடத்துவதன் மூலம் பள்ளி மாணவர்களின் திறமைக்கு அனைவரின் முன்பாகவும் வெளிக்கொண்டு வர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.