வேட்டு வைத்த விஜய்..! விசிக- காங்கிரஸுக்கு திமுக வைத்த செக்..! ஸ்டாலின் அதிரடி முடிவு..!

Published : Jan 29, 2026, 12:24 PM IST

கூட்டணியை இன்னும் பலமாக்க முதல்வர் ஸ்டாலின் விரும்புகிறார். ஏற்கனவே கமல்ஹாசனின் மக்கள் நீத மய்யம் கூட்டணியில் இணைந்துள்ளது. இதை தவிர இன்னும் சில சிறிய கட்சிகள் திமுகவுடன் கைகோர்த்துள்ளன.

PREV
14

‘‘2021 சட்டமன்ற தேர்தலைப் போலவே தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும். கூடுதலாக ஒரு சீட்டு கூட தர முடியாது. ஆட்சியிலும் பங்கு தர முடியாது’’ என காங்கிரஸ் கட்சியிடம் திமுக தரப்பு உறுதியாக கூறி விட்டதாக தகவல்கள். அதேபோல் விடுதலை சிறுத்தைகள், இரண்டு கம்யூனிஸ்கள், மதிமுகவிற்கும் கூடுதல் சீட்டு வழங்க திமுக ஆர்வம் காட்டவில்லை என்றும் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியால் குழப்பம் ஏற்பட்டது. இருப்பினும் தற்போது வரை காங்கிரஸ் கட்சி, திமுக கூட்டணியில் நீடித்து வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிகள் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சு வார்த்தைகள் சூடு பிடித்துள்ளது. அதன்படி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சு வார்த்தையை தொடங்கியுள்ளது. காங்கிரஸ் பொதுசெயலாளர் கே.சி வேணுகோபால் திமுக தலைவர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார். குறிப்பாக இந்த முறை காங்கிரஸ் கட்சி 2021 சட்டசபை தேர்தலை விட, அதிக இடங்களில் களமிறங்குவது அல்லது ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெற திட்டமிட்டுள்ளது. ஆனால் திமுக தற்போது கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு கூடுதல் இடங்களை வழங்க தயங்குகிறது.

24

மாறாக புதிய கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டு வருவதில் கவனம் செலுத்துகிறது. தொகுதி பங்கீடு பற்றி பேச காங்கிரஸ் கடந்த ஆண்டு குழு அமைத்து திமுக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது காங்கிரஸ் ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதிகளை கேட்டது. ஆனால் அதனை ஏற்க திமுக மறுத்துவிட்டது. இது பற்றி திமுக மூத்த தலைவர் கூறுகையில், ‘‘ காங்கிரஸுக்கு ஆட்சியில் பங்கோ, கூடுதல் இடங்களோ கிடையாது. 2021 சட்டசபை தேர்தலில் ஒதுக்கப்பட்ட அதே இடங்கள் தான் கிடைக்கும். 2021ல் இருந்த தொகுதி பங்கீடு ஃபார்முலா சிறப்பாக செயல்பட்டதால், இந்த முறையும் இதுவே தொடரும் என்று ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

34

கடந்த 2021 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதில் 18 இடங்களில் வெற்றி பெற்றது. அதேபோல் இந்த முறையும் அதே தொகுதிகளை மட்டுமே வழங்க திமுக திட்டமிட்டுள்ளது. தொல் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வைகோவின் மதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு தலா ஆறு இடங்கள் வழங்கப்பட்டது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்குக்கு மூன்று தொகுதிகளும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மனிதநேய மக்கள் கட்சி, வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சி போன்ற கட்சிகளுக்கு தலா ஒரு இடங்களும் வழங்கப்பட்டது. இந்த கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டன. இந்த முறையும் அதே தொகுதிகளை ஒதுக்க திமுக திட்டமிட்டுள்ளது. கூடுதல் தொகுதிகளை யார் கேட்டாலும் திமுக அதற்கு ஒப்புக்கொள்ளாது’’ எனக்கூறினார்.

44

ஏனென்றால் நடிகர் விஜய் புதிதாக கட்சி தொடங்கியுள்ளார். அவரது தமிழக வெற்றி கழகம் சட்டசபை தேர்தலில் களமிறங்க உள்ளது. இதனால் அவர் ஓட்டுகளை பிரிக்கலாம். அதே போல் கடந்த ஐந்து ஆண்டு ஆட்சி மீது இயல்பாகவே மக்களிடம் அதிர்ச்சி இருக்கலாம். இதனால் கூட்டணியை இன்னும் பலமாக்க முதல்வர் ஸ்டாலின் விரும்புகிறார். ஏற்கனவே கமல்ஹாசனின் மக்கள் நீத மய்யம் கூட்டணியில் இணைந்துள்ளது. இதை தவிர இன்னும் சில சிறிய கட்சிகள் திமுகவுடன் கைகோர்த்துள்ளன.

 இதனால் அந்த கட்சிகளுக்கும் சீட்டு ஒதுக்கீடு செய்ய வேண்டிய கட்டாயம் திமுகவுக்கு உள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சிக்கு அதிக சீட்டு ஒதுக்க திமுக தயங்குகிறது. என்டிஏ மாநாட்டில் தேமுதிக பங்கேற்கவில்லை. ஆனால் தேமுதிக இரட்டை இலக்க எண்ணிக்கையில் தொகுதிகளை கோருகிறது. அது சாத்தியமில்லை. ஆனாலும் தேமுதிகவுடன் திமுகவும் தொடர்ந்து பேசி வருகிறது. ஒற்றை இலக்க எண்ணுக்கு கீழான தொகுதிகளுக்கு அவர்கள் சம்மதித்தால் திமுகவில் அவர்கள் இணைவது உறுதி என்கிறார்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories