நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே குறிச்சியை சேர்ந்தவர் வீரமணி. இவரது மகன் சந்தோஷ். நாகையில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் வயிற்று வலி காரணமாக நாகையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது சந்தோஷ் சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்தார்.