அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் துணைக்கொண்டு தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட மே 18ஆம் தேதியை, ஆண்டுந்தோறும் தமிழின அழிப்பு செய்த கருப்பு நாளாக தமிழிழீ தமிழர்கள் மட்டுமின்றி, உலகெங்கும் பரவி வாழும் ஒட்டுமொத்த தமிழர்கள் அனுசரித்து வருகின்றனர்.
குறிப்பாக, மே 18ஆம் தேதி அன்று, தமிழ்நாட்டில் உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள், அரசியல் இயக்கங்கள், மனித உரிமை ஆர்வலர்கள் என பலரும், துக்க நாளை அனுசரிப்பதோடு, வீரமரணம் அடைந்த போராளிகளுக்கு அஞ்சலி செலுத்தி வருவது வழக்கமாகும்.