TVK Vs DMK: பெரும்பான்மை நிரூபித்த கையோடு.. தவெக-வுக்கு உச்சநீதிமன்றம் வெளியிட்ட மற்றொரு குட்நியூஸ்.. அதிர்ச்சியில் திமுக

Published : May 13, 2026, 01:52 PM IST

TVK Vs DMK: திருப்பத்தூர் தொகுதியில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதி, சட்டப்பேரவை நிகழ்ச்சிகளில் பங்கேற்க உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

PREV
15
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி

நடந்து முடிந்த சட்டப்பேரவை தொகுதியில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் தொடர்ந்து வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் பெரியகருப்பனும், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சீனிவாச சேதுபதி இடையே கடும் போட்டி நிலவி வந்தது. ஒவ்வொரு சுற்றிலும் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் இருவரும் மாறி மாறி முன்னிலை வகித்து வந்தனர். இறுதியில் திமுக முன்னாள் பெரியகருப்பன் 83,374 வாக்குகளும், சீனிவாச சேதுபதி 83,375 வாக்குகளும் பெற்றதை அடுத்து ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

25
நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க தடை

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சீனிவாச சேதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார். இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எல். விக்டோரியா கௌரி மற்றும் என். செந்தில்குமார் அமர்வில் அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது.

35
உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நம்பிக்கை வாக்கெடுப்பு உள்ளிட்ட சட்டபேரவை நிகழ்ச்சிகளில் பங்கேற்க தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதிக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதி சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

45
பெரியகருப்பன் கேவியட் மனு

மற்றொரு புறம் திமுக முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் தரப்பில் முன்கூட்டியே கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தங்களது கருத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

55
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை

வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட ஒரு சட்டமன்ற உறுப்பினரை நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கெடுக்க தடை விதித்தது தவறானது என சீனிவாச சேதுபதி தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்தனர். மேலும் இவ்வாறான ஒரு உத்தரவை பிறப்பித்திருக்கக்கூடாது, இது கடுமையானது கூறிய நீதிபதிகள் வழக்கு விசாரணையை மேலும் 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர். முதல்வர் விஜய் பெருபான்மை நிரூபித்த கையோடு உச்சநீதிமன்றமும் தவெக ஆதரவாக தீர்ப்பு வழங்கியுள்ளது தவெக தொண்டர்கள் உற்சாகத்தில் துள்ளிக்குதித்து வருகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories