அனுபவம்வாய்ந்த செங்கோட்டையன் வந்துள்ளதால் தனக்கு இருக்கும் முக்கியத்துவம் குறைந்து விடக்கூடாது என்பதில் புஸ்ஸி ஆனந்த் கண்னும் கருத்துமாக உள்ளனர். ஆகையால் மாவட்ட செயலாளர்களை கைக்குள் போட்டு அதிகாரத்தை மேம்படுத்தி வருகிறார்.
மறுபுறம் ஆதவ் அர்ஜுனா தனக்கு இருக்கும் ஆதராவளர்களை வைத்து தன்னுடைய அதிகாரத்தை நிரூபிக்க பார்க்கிறார். இப்படியாக புஸ்ஸி ஆனந்தும், ஆதவ் அர்ஜுனாவும் மறைமுகமாக அதிகார மோதலில் ஈடுபட்டு வருவது விஜய்க்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
எப்படி சமாளிக்க போகிறார் விஜய்?
உட்கட்சி பூசல், அதிகார போட்டி இல்லாத கட்சிகளை இல்லை எனலாம். ஏன் நீண்ட நெடிய திமுக, அதிமுகவில் கூட இந்த பிரச்சனைகள் உண்டு.
ஆனால் அதிகார மோதலை ஒரு கட்சியின் தலைவர் எப்படி சமாளிக்கிறார் என்பதை பொறுத்தே அக்கட்சியின் வெற்றி வாய்ப்பு அமையும். விரைவில் தேர்தல் வர உள்ள நிலையில், தவெகவின் வெற்றிக்கு ஆதவ் அர்ஜுனா vs புஸ்ஸி ஆனந்த் மோதல் வேட்டு வைத்து விடக்கூடாது என்பதே தவெகவினரின் விருப்பமாக உள்ளது.